Skip to main content

பிரசவத்திற்காக வீட்டுக்கு சென்ற மனைவி... மூன்று பெண்களை திருமணம் முடித்த கணவன்..!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Three marriages that took place during the period of exile ... Husband who threatened his wife with girlfriends

 

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். அதே பின்னலாடை நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகரைச் சேர்ந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் பணிபுரிந்துவந்தார். இங்குப் பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்துள்ளனர். திருமணம் முடிந்து இருவரும் திருப்பூரிலேயே வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், கீதா இரண்டாவது முறையாக கருவுற்றார். இதையடுத்து, பிரசவத்திற்காக கீதாவை தர்மபுரிக்கு அனுப்பியுள்ளார் சிங்காரன்.

 

குழந்தை பிறந்தபின்பு தர்மபுரியிலிருந்து திருப்பூர் திரும்பிய கீதா, தனது கணவரின் செயலைக் கண்டு அதிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கணவரை திருந்துமாறு அறிவுறுத்தியும் அவர் மாறாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘எனது இரண்டாவது பிரசவத்திற்காக தர்மபுரி அனுப்பிய எனது கணவர், சில ஆண்டுகள் கழித்தும் என்னை திருப்பூருக்கு அழைக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு வேறு நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தனது வேலையைத் தொடர்ந்துவந்த எனது கணவர், சில நாட்களில் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம்செய்துள்ளார். சில நாட்களில் அந்தப் பெண் மரணித்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

 

மேலும், அதோடு நிறுத்திக்கொள்ளாமல் நான்காவதாக மதுரையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்கு அனுப்பிய என்னை அவர் மறந்த நிலையில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். மேலும் சிங்காரம், அப்பெண்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாதபடி தனித்தனியாக வாடகை வீட்டில் குடியமர்த்தி வாழ்ந்துவந்துள்ளார். அவர் சாதுர்யமாக செயல்பட்டு இவற்றை எல்லாம் மறைத்துவந்த நிலையில், நான் திருப்பூருக்குத் திடீரென வந்ததும் இவை அனைத்தும் அம்பலமானது. அவரை நான் கண்டிக்கும்போதெல்லம் திமிராக பேசியதோடு மட்டுமில்லாமல், மற்ற காதலிகளையும் வைத்து என்னை மிரட்டினார்’ என கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.