Wife try lost their life due her husband under influence alcohol

விருதுநகர் – அல்லம்பட்டியில் வசித்து வரும் அந்தோனிராஜ்மதுபோதையில் தன் மனைவி ஜான்சிராணியை அடித்துதுன்புறுத்துவது வழக்கம். கடந்த 2 நாட்களாகஇதேரீதியில் அந்தோனிராஜ் நடந்துகொண்டதுஜான்சிராணிக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்திருக்கிறது.

Advertisment

அதனால் ஏற்பட்ட விரக்தியில் ஜான்சிராணிதனது 13 வயதான மூத்த மகளின் கழுத்தைக் கயிற்றால் நெரித்துவீட்டிற்குள் போட்டு பூட்டிவிட்டு,9 வயதான இளைய மகளை அழைத்துக்கொண்டுவிருதுநகர் அருப்புக்கோட்டை மேம்பாலத்திலிருந்துரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துச் சென்றுள்ளார்.

Advertisment

ரயில் வருவதற்குதாமதமானவுடன்இளைய மகளின் கழுத்தை நெரித்துள்ளார். மகள் அழுது சத்தம் போட,அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்ஓடிவந்து மீட்டுள்ளனர். உடனே, மகளை விட்டுவிட்டு ஓடிய ஜான்சிராணிகீழே விழுந்து காயமடைந்துள்ளார். தாயையும் மகளையும் மீட்டுவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது, வீட்டில் கழுத்து நெரிபட்டுக் கிடந்த மூத்த மகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. விருதுநகர் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்துபலத்த காயமடைந்த நிலையில் கிடந்த மூத்த மகளையும் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்துவிருதுநகர் கிழக்குகாவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.