Skip to main content

மனைவியைக் கொலை செய்த கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த கணவன்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

Wife passed away husband surrender in police station

 

கடலூர் மாவட்டம், ஆவினங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி என்பவரின் மகன் நாகராஜன்(32). இவருக்கும், கம்மாபுரம் கிழக்கு பகுதியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணி செய்து வரும் ராஜலட்சுமி(25) என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் குழந்தை இல்லாததால் அவர்களுக்குள் தகராறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் நேற்று கம்மாபுரம் பழைய காவல் நிலையம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கடும் ஆத்திரமடைந்த நாகராஜன், மனைவி ராஜலட்சுமியை கத்தியால் தலை, பின் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவியை கொலை செய்த நாகராஜன், கையில் கத்தியுடன் கம்மாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 


அவரை கைது செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு தரப்பு உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.