Skip to main content

மனைவி கொலை: நாடகமாடிய சென்னை வடபழனி கோவில் குருக்கள் நண்பருடன் கைது

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
Vadapalan-murder 600.jpg


கடந்த 5ஆம் தேதி கணவரை கட்டிப்போட்டு மனைவி படுகொலை என்ற செய்தி பரவியதும் சென்னை வடபழனி பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மனைவியை நண்பருடன் சேர்ந்து கணவனே கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
 

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த கோவில் குருக்கள் பாலகணேசன். இவரது மனைவி ஞானப்பிரியா. கடந்த 4-ந்தேதி நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கணவர் பாலகணேஷ் வீட்டுக்கு வெளியில் கழிவறை அருகே கை, கால்களும் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார். 
 

கொள்ளையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து பாலகணேசை கட்டிப் போட்டு விட்டு ஞானப்பிரியாவை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த கொலை குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
 

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவர் பாலகணேசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தவர்கள் உருட்டு கட்டையால் என்னை தாக்கி கட்டி போட்டு விட்டு மனைவியை கொலை செய்து விட்டு தப்பியதாக முதலில் வாக்குமூலம் கொடுத்தார்.
 

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போட்டு பார்த்ததில் பால கணேஷ் கூறியது பொய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலகணேசிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். 
 

போலீசார் விசாரணையில் பாலகணேஷ் கூறுகையில், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லை. இந்த விசயத்தில் என் மனைவி என்னை கிண்டல் செய்து வந்தார். இதனால் என் மனைவியை கொலை செய்ய நண்பர் மனோஜ் உடன் இணைந்து திட்டம் தீட்டினேன். நண்பனுடன் சேர்ந்து மது அருந்தினேன். பின்னர் வீட்டுக்கு வந்து மனைவியை கொன்றோம். 4ஆம் தேதியே இந்த சம்பவம் நடந்தது. 5ஆம் தேதி காலையில் வீட்டு உரிமையாளர் பார்த்து போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார் என கூறியுள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வழக்கறிஞர் புகார் எதிரொலி; வி.சி.க. விக்ரமன் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Bigg Boss Vikraman booked in 10 sections for lawyer complaint

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், 'பிக் பாஸ்' எனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவருமான விக்ரமன் என்பவர் மீது இளம்பெண் ஒருவர் அளித்திருந்த புகாரின் பேரில் விக்ரமன் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சில மாதங்களாகவே விக்ரமன் மீது இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். குற்றச்சாட்டு தெரிவித்துள்ள இளம்பெண்ணுடன் விக்ரமன் உரையாடிய வாட்ஸ் அப் சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் இதற்கு விக்ரமன் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணை தமக்குத் தெரியாது என்று மறுக்காத போதும் அவருடன் தனக்கு நட்பு இருந்ததாக விக்ரமன் விளக்கம் கொடுத்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் துறையில் உள்ள துணை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதில், 'நான் லண்டனில் தங்கிப் படித்து வந்தபொழுது வி.சி.க துணை செய்தித் தொடர்பாளர் விக்ரமன் அறிமுகமானார். அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். 13 ஆண்டுகளாக நாங்கள் பழகி வந்த நிலையில், இந்த வருடத்தின் ஜனவரி மாதம் லண்டனிலிருந்து படிப்பை முடித்துவிட்டு வந்த பொழுதும் கூட சென்னையில் கே.கே. நகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தோம். 

 

காதலிப்பதாகக் கூறி என்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதோடு என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளார். நான் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டபோது தகராறு ஏற்பட்டது. பிறகு என்னுடனான நட்பை விட்டு விலகினார். அவர் என்னிடம் பல தவணை முறைகளில் வாங்கிய ரூ.13.7 லட்சத்தில் ரூ.12 லட்சம் திரும்ப கொடுத்துள்ளார். ஆனால், மீதமுள்ள ரூ.1.7 லட்சம் தரவில்லை. அதை அவரிடம் கேட்டபோது மிகவும் ஆபாசமாகவும், சாதி பெயரைக் குறிப்பிட்டு பேசி உதாசீனப்படுத்தினார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். 

 

இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த இளம்பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளம்பெண் அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விக்ரமன் மீது மோசடி வழக்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.