Skip to main content

மனைவியை கம்பியால் அடித்தேக் கொன்ற கணவன்!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
 arrested



காதலனுடன் எஸ்கேப்பான மனைவி, தனது பாஸ்போர்ட் விசாரணைக்காக மீண்டும் சொந்த ஊருக்கு வர, காத்திருந்த கணவனோ கையில் தயாராக கொண்டு வந்திருந்த இரும்புக் கம்பியால் மனைவியை அடித்தேக் கொன்றுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

     ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையை சேர்ந்தவர் மோசஸ். பேருந்து வாகன ஓட்டுநரான இவருக்கும் அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த லதாவுக்கும் கடந்த 201ம் ஆண்டு திருமணமானது. இரு குழந்தைகளுடன் முதலில் சொந்த ஊரில் இருந்து தொழில் செய்து வந்த மோசஸிற்கு கடன் நெருக்கடி அதிகமாகவே, அபிராமத்தில் குடி பெயர்ந்து பசும்பொன்னில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிக்குழந்தைகளின் வாகன ஓட்டுநராக பணியாற்றியதுடன் மட்டுமில்லாமல், தன்னுடைய மனைவி லதாவிற்கும் அதே பள்ளியில் அலுவலக பணியாளராக பணி அமர்த்தியிருக்கின்றார் இவர். இவ்வேளையில், வேலூர் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவருடன் லதாவிற்கு நெருக்கம் ஏற்பட அது காதலாக மாறி  2018, மே மாதம், தனது கணவரைவிட்டு காதலனுடன், லதா மாயாமானார். மோசஸூம் தனது மனைவி லதாவை காணவில்லை என 2018, மே 6 ல், அபிராமம் போலீசில் புகார் கொடுத்து காத்திருந்தார்.

 

  இவ்வேளையில், தனது காதலனுடன் வெளிநாட்டிற்கு செல்வதற்காக, முன்பு தன்னுடைய கணவருடன் வசித்த அபிராமம் முகவரியை கொடுத்து பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருந்தார் கள்ளக்காதலனுடன் மாயமான லதா. விசாரணைக்காக அபிராமம் காவல்நிலையமும், " நீங்கள் காணாமல் போனதாக உங்கள் கணவர் புகார் கொடுத்துள்ளார். உங்கள் கணவருடன் வந்து அதனை நிவர்த்தி புகாரை நிவர்த்தி செய்துவிட்டு செல்லுங்களேன்." என அழைப்பு விடுக்க, எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தனது கணவர் மோசஸைத் தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவகாரத்தையே கூறாமல், " நான் செய்தது தவறுதான். இனிமேல் ஒழுங்காக வாழ்கிறேன்." என போனிலேயே அழுது புலம்பி விட்டு கணவரைத் தேடி அபிராமம் அருகே அகத்தாரிருப்பு விலக்கு ரோட்டிற்கு சென்றுள்ளார். இது தான் தருனமென அங்கு இரும்புக்கம்பியுடன் காத்திருந்த மோசஸ் லதாவை தாக்கிக் கொன்றிருக்கின்றார். இது குறித்து அபிராமம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மோசஸை கைது செய்துள்ளது. கணவனே மனைவியைக் கொன்றதால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.