Skip to main content

குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை அடித்து சாக்கில் மூட்டைகட்டி சாக்கடையில் வீசிய மனைவி!

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

புதுச்சேரியில் மது அருந்திவிட்டு தினமும் அடித்து துன்புறுத்திய கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி அவருடைய சகோதரியுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெரித்து சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 The wife killed her husband in Puducherry...police investigation

 

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே கழிவுநீர் வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் அவரை கொலை செய்து வீசிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

 

 The wife killed her husband in Puducherry...police investigation

 

murder

 

விசாரணையில் அவர் நெல்லித்தோப்பு வினோபா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஸ்டெல்லாவை அழைத்து விசாரித்த பொழுது அவர் குடிபோதையில் கால்வாயில் விழுந்து விழுந்து உயிரிழந்த இருப்பார் என்றும், தற்கொலை செய்திருப்பார் என்றும் மனைவி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

 

murder

 

அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது அங்கு அரிசி மூட்டை சாக்குகள் சிதறிக்கிடந்ததை கண்ட போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் தலையில் அடிபட்டு உயிரிழந்த கமலகண்ணன் கழுத்து இறுக்கப்பட்டது தெரியவந்தது. அதேபோல் பெண்ணின் கால்களால் முகம் மிதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

குடிபோதையில் தகராறு செய்த கணவனை சுவற்றில் தள்ளவிட்டு அடித்து கழுத்து எலும்பை முறித்து கொலை செய்ததாக ஸ்டெல்லா ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் நடந்த கொலையையும், சடலத்தையும் மறைக்க அவரது தங்கையான ஜெரினாவிடான் உதவிகோரியுள்ளார்.

 

murder

 

ஆனால் ஜெரினாவோ அவரது  ஆண் நண்பரான பிள்ளைச்சாவடியை சேர்ந்த தமிழ் மணி என்பவரை வரவழைத்துள்ளார். அப்போது சடலத்தை மறைக்க வீட்டில் உள்ள அரிசி முட்டையினை எடுத்து சடலத்தை கழுத்து பகுதிகளை முறித்து மூட்டைகட்டி சாக்கடையில் எறித்துள்ளனர்.

 

 

இந்த வழக்கில் ஸ்டெல்லா,ஜெரினா,தமிழ் மணி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். தமிழ் மணி ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று அண்மையில் பரோலில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.