Skip to main content

சொகுசு காருக்காக மனைவியை கொன்ற வழக்கு: கணவரின் பெற்றோரும் கைது!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

wife inciden husband and family arrested the police

 

சேலத்தில், சொகுசு காரை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி, புதுப்பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவரை தொடர்ந்து அவருடைய பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. முன்னாள் ஊர்க்காவல் படைவீரர். இவருடைய மகன் கீர்த்திராஜ் (வயது 31). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கீர்த்திராஜின் மனைவி தனஸ்ரீயா (வயது 26). பி.இ., பட்டதாரி. இவர்களுக்கு மூன்று ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

 

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட தகராறின்போது, கீர்த்திராஜ் மனைவியைத் தாக்கியுள்ளார். இதனால் அவருடன் கோபித்துக் கொண்டு தனஸ்ரீயா, சூரமங்கலம் முல்லை நகரில் வசித்து வரும் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற விட்டார். ஜூன் 11- ஆம் தேதி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் கீர்த்திராஜ். அன்று இரவு தனஸ்ரீயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில், சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கீர்த்திராஜ், வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். 

 

இதையடுத்து கீர்த்திராஜ், தன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் கீர்த்திராஜை அப்போது கைது செய்தனர். அதேநேரம், திருமணமான மூன்றே ஆண்டில் புதுப்பெண் கொல்லப்பட்டதால், இச்சம்பவம் குறித்து சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினியும் விசாரணை நடத்தினார். 

 

கீர்த்திராஜூம், அவருடைய தந்தை பெரியசாமி (வயது 60), தாயார் ரஞ்சனி (வயது 57) ஆகியோரும் தனஸ்ரீயாவிடம் அடிக்கடி பணம் கேட்டும், சொகுசு கார் ஒன்றை பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படியும் கேட்டு கொடுமைப்படுத்தி வந்திருப்பது தெரிய வந்தது. 

 

கணவர் வீட்டார் கேட்டபடி வரதட்சணை வாங்கி வராததும், கொலைக்கு மற்றொரு காரணமாக இருந்துள்ளது. இதுகுறித்த கோட்டாட்சியரின் முழுமையான விசாரணை அறிக்கை, சூரமங்கலம் காவல்துறை உதவி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் பேரில், பெரியசாமி, ரஞ்சனி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.