Skip to main content

'அதுக்கு' ஒத்துக்காததால் மனைவி, குழந்தையை எரித்துக்கொன்ற கணவன்! மரண வாக்குமூலத்தால் திருப்பம்!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

ஆத்தூரில், பாலியல் உறவுக்கு அழைத்தும் மனைவி வர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவி, குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி கணவனே எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (31). ரிக் வண்டி தொழிலாளி. இவருடைய மனைவி பூமதி (26). இவர்களுக்கு பூவரசன் (4) என்ற ஆண் கு-ழந்தை உள்ளது. நிலாஸ்ரீ (3) என்ற பெண் குழந்தையும் இருந்தாள்.

 

murder


கார்த்தி, ரிக் வண்டி தொழிலாளி என்பதால் அடிக்கடி வடமாநிலங்களுக்கு ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக சென்று விடுவார். மாதத்திற்கு சில நாள்கள் மட்டுமே குடும்பத்துடன் தங்கி இருப்பார். கார்த்திக்கு மது போதை பழக்கம் இருந்து வருவதால், அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் கார்த்தி வீட்டுக்கு வந்திருந்தபோதும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 18ம் தேதி இரவு கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு வெடிக்க, இருவரும் தனித்தனி அறையில் படுத்துத் தூங்கியுள்ளனர்.

 


நள்ளிரவில் பூமதி மற்றும் இரு குழந்தைகளும் தீயில் கருகிக் கிடந்தனர். கார்த்தி கத்தி கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தன் மீதான கோபத்தில் மனைவி குழந்தைகளை எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கார்த்தி அப்போது சொன்னார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

murder

 

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த பூமதி, தன் மீதும் குழந்தைகள் மீதும் கணவனே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றதாக தன் சகோதரரிடம் கூறியுள்ளார். அவருடைய மரண வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்த அவர், இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசாரிடம் தகவல் அளித்தார். 

 


அந்த வீடியோவில், ''முதல்நாள் மது போதையில் வந்த கார்த்தி, என்னிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். அதற்கு அடுத்த நாளும் போதையில் இருந்த கார்த்தி, என்னை அடித்து துன்புறுத்தினார். கொஞ்சம் போதை தெளிந்த உடன், அவர் சாப்பாட்டை ஊட்டிவிடுமாறு கூறினார். இருவரும் 'ஜாலியாக' இருக்கலாம் வா என்று அழைத்தார். 

 

murder

 

ஆனால் இரு நாள்களாக அடித்து துன்புறுத்தியதில் எனக்கு உடல் வலி இருக்கிறது. இப்போது ஜாலியாக இருக்கலாம் என்றால் எப்படி நான் வர முடியும் என்று கூறி நான் அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டேன். இதனால் அப்போதும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் எனக்கு இல்லாதவள், இந்த உலகத்தில் உயிருடன் இருக்கக் கூடாது என்று கூறி, என் மீதும், குழந்தைகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்,'' என்று கூறியிருந்தார்.

 


போலீசாரிடமும் இதையே மரண வாக்குமூலமாக பூமதி தெரிவித்துள்ளார். இதையடுத்து கொலை முயற்சி வழக்காக போலீசார் பதிவு செய்தனர். கார்த்தியை அழைத்து விசாரணை நடத்தியதில், அவரே கொலை செய்ய முயற்சித்துவிட்டு, மனைவி மீது பழி போட்டு தப்பிக்க நினைத்திருப்பது அம்பலமானது.

 


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பூமதி இன்று (செப். 22, 2018) அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில், பெண் குழந்தை நிலாஸ்ரீயும் இறந்தாள். சிறுவன் பூவரசனுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

தாயும், குழந்தையும் இறந்ததை அடுத்து இதனை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். கார்த்தியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.