Advertisment

பெண்களை மயக்கி ஆபாச வீடியோ..! தலைமறைவாக இருந்த வங்கி கேஷியர் கைது! -மனைவியின் புகாரால் நடவடிக்கை...

  Viralimalai

Advertisment

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதனிடம் தஞ்சையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சீனியர் வழக்கறிஞர் கணபதி என்பவர் மூலம் எட்வின் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, இதை ஏன் காவல்துறை தீவிரமாக விசாரிக்கவில்லை என எச்சரித்து விட்டு வில்லங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த அந்த வங்கி அதிகாரியின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். மேலும் 24 மணி நேரத்துக்குள் எட்வின் ஜெயக்குமாரை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அப்படி என்ன இருக்கிறது என்று அந்த இளம்பெண்ணிடம் நாம் பேசியபோது, "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி எனக்கு திருமணம் நடந்தது. கணவர் எட்வின் ஜெயக்குமார் திருச்சி விராலிமலையில் உள்ள வங்கியில் காசாளராக இருக்கிறார். கல்யாணம் ஆன அடுத்த சில நாளில் ரீட்டா என்பவரை என் தூரத்து உறவுக்காரப் பெண் இனி இந்த வீட்டில் தான் தங்குவார் என்று சொன்னார்.

Advertisment

வீட்டுக்கு லேட்டாக நள்ளிரவில் வருவதும், வந்தவுடன் செல்போனில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒரு நாள் எதேச்சையாக அவருடைய செல்போனை பார்த்தபோது அவருடைய நிர்வாண படங்களும் பெண்களிடம் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

அவர் வேலைக்கு சென்ற பின்பு வீட்டிலிருந்த பீரோவில் 15- க்கும் மேற்பட்ட செல்போன்கள் வைத்திருந்ததும், அதில் அவர் எடுத்திருந்த புகைப்படங்களில் வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக படமெடுத்து இருப்பதும், அந்த ஏரியா பகுதி பெண்களுடன் அசிங்கமாக படம் எடுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து இருப்பதை பார்த்து இன்னும் பயந்து போனேன்.

சில பெண்களிடம் அசிங்கமாக குறுஞ்செய்திகளும் வீடியோக்களும் இருப்பதை பார்த்து அதிலிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.

அதில் தேவிபிலோமினாளிடம் ஏன் இப்படி என் புருஷனிடம் பேசுற, இது அசிங்கம் இல்லையா கேட்டேன். அவ சிரிச்சுகிட்டு நான் மட்டும் இல்லை உன் புருஷனோட நிறைய பெண்களுக்கு தொடர்பு இருக்கு. அவரு எங்களை விட்டு பிரிந்து போக மாட்டாரு. நீ இன்னைக்கு தான் வந்திருக்க. நான் பலமுறை நீ இருக்குற வீட்டுக்கு வந்திருக்கேன். இதை பெரிசு படுத்தாம இருந்தா உனக்கு நல்லது என்று சொன்னவுடன் எனக்கு தலையே சுற்றியது.

என்னோட கணவர் போனில் புவனா என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தில் கர்ப்பமடைந்த விபரமும், அதை கலைக்க சொல்லி என் கணவர் கட்டாயப்படுத்திய வாட்ஸ்அப் தகவல்கள் இருந்தது.

இவர் வங்கியில் பணம் கொண்டு வரும் பெண்களை குறிவைத்து அவர்களை வசியப்படுத்தி அதற்காகத்தான் காசாளர் பணியிலிருந்து உயர் பதவிக்கு பிரமோஷனும் கிடைக்கும் அந்த பதவிக்கு செல்லாமல் காசாளர் பணியில் தொடர்ந்து இருக்கிறார்.

இது இல்லாமல் ஞானரோசி, விமலா, லட்சுமி, தமிழ்ச்செல்வி, மரியா, சிட்டு, அகிலா, என பெரிய பட்டியலே இருந்தது. இவர்கள் அனைவருடன் ஆபாசமாக வீடியோகால் மூலம் பேசி இருக்கிறார். என் வீட்டின் அருகே இருக்கும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்திருக்கிறார்.

சென்னையில் நான் பார்த்த வேலை விட்டு எதிர்காலம் இனிமையாக இருக்கும் என்று நம்பி கல்யாணம் பண்ணின எனக்கு என் கணவர், அருவருக்கத்தக்க பெண்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தபோது எனக்கு பெரிய பயம் தொற்றிக் கொண்டது.

இந்த வீடியோ பத்தி அவரிடம் கேட்டபோது நான் இப்படித்தான் இருப்பேன். அவர்களெல்லாம் என்னுடைய தோழிகள். நான் என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன்.இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன். உனக்குத் தெரியாமல் உன்னையே நான் படம் எடுத்து வைத்திருக்கிறேன் நீ குளிக்கும்போது உனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் என்னைப் பற்றி ஏதாவது பேசினால் அந்த வீடியோ இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதால் பயந்து போனேன்.

திருமணத்திற்காக எட்வீன் ஜெயக்குமாரின் அம்மா லில்லி, அவருடைய சகோதரி கேத்ரீன், அவர்கள் சொன்னதற்கு இணங்க வரதட்சணையாக 25 பவுன் நகையும் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும், 6 லட்சத்திற்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினர். ஆனால் திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே என் பையன் வங்கியில் வேலை பார்க்கிறார். இந்த பணம் பத்தாது இன்னும் 50 பவுன் நகை வேண்டும் என்று டார்ச்சர் செய்தனர்.

ஒரு பக்கம் கல்யாணமான கணவனின் வக்கிரமான செயல், இன்னொரு பக்கம் மாமியார், நாத்தனார் வரதட்சணை கொடுமை. இரண்டு பக்கமும் கொடுக்கும் டார்ச்சரை அம்மா பார்த்து சொல்ல முடியாமல் ஒரு மாதம் அவர்களிடம் நரக வேதனையை அனுபவித்தேன்.

இந்த பிரச்சினை குறித்து பேசின ஒரு மாதத்தில் என்னை இரண்டு முறை யாருமில்லாத மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லும்போது இனி இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்று உயிருக்கு பயந்து தப்பித்து என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அம்மா அப்பாவுடன் தஞ்சை டிஐஜி லோகநாதனிடம் புகார் கொடுத்தேன். அவர் வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி விசாரித்து, அவர்கள் மீது 498a, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை வல்லம் போலிசார் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கை மாற்றினார்கள்.

இதற்கு இடையில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தான் உடனே கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்" என்றார்.

இதற்கு இடையில் முன்ஜாமீன் பிரச்சனையில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தோடு தலைமறைவாகி 6 மாதம் கடந்த நிலையில் ஸ்ரீரங்கம், உய்யங்கொண்டான் திருமலை, இனாம்குளத்தூர், மணப்பாறை என தொடர்ச்சியாக பல இடங்களுக்கு 5 சிம்கார்டுகளை வைத்து மாறி மாறி தலைமறைவாகி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வங்கி கேஷியர் எட்வின்ஜெயக்குமார் செல்போன் டவர் திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள லாஜில் காட்டா உடனே உஷார் ஆனா தனிப்படை போலிசார் அதிரடியாக உள்ளே நுழைந்து கைது செய்தனர்.

அவர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப், பென்டிரைவ், சிடி, ஹார்டுடிஸ்க், ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து வங்கி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது பெண்களிடம் இப்படி இவர் ஆபாச வீடியோ தொந்தரவு பிரச்சனை என்று நிறைய வந்திருக்கிறது இதுகுறித்து விராலிமலை காவல் நிலைத்தில் புகார் கொடுத்து செமத்தியா வாங்கி இருக்கிறார் ஆனால் இதையெல்லாம் சரிகட்டி வெளியே வந்துவிட்டார் என்கிறார்கள்.

cashier bank viralimalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe