Skip to main content

சேலத்தில் சென்னையை சேர்ந்த கேட்டரிங் தொழில் அதிபர் மனைவி, மகளுடன் விஷம் குடித்து தற்கொலை!

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

சேலத்தில் தனியார் தங்கும் விடுதியில் சென்னையைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் அதிபர் மனைரி, மகளுடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்கொலை முயற்சியில் உயிர் பிழைத்த மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளி க்கப்பட்டு வருகிறது.

 

poison

 

சென்னை சூளைமேடு பாலாஜி பவன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (60). சென்னையில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவர் புதன்கிழமை (ஏப்ரல் 10, 2019) அன்று தனது மனைவி அனுராதா (55), மகள்கள் ஆர்த்தி (22), ஆஷிகா (20) ஆகியோருடன் சேலம் வந்திருந்தார். நால்வரும் மாலை 4 மணியளவில், சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள செல்வம் ஹோட்டல் என்ற தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். 

 

poison

 

இவர்களில், இவர்களில் ஆர்த்தி, பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். ஆஷிகா, திண்டுக்கல் பொறியியல் கல்லூரியில் பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

 

 

இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 11) காலை 10.30 மணியளவில், விடுதி வரவேற்பறைக்கு போன் செய்த ஆர்த்தி, அறைக்கதவை திறக்க முடியவில்லை. வந்து கதவை திறந்து விடுங்கள் என்று கூறினார். விடுதி ஊழியர்கள் விரைந்து சென்று அந்த அறைக்கதவை திறந்தனர்.

 

poison

 

அப்போது உள்ளே, விஜயகுமார், அனுராதா, ஆஷிகா ஆகிய மூன்று பேரும் சடலமாகக் கிடந்தனர். ஆர்த்தி மட்டும் தடுமாறிய நிலையில், நின்று கொண்டிருந்தார். ஊழியர்கள் உடனடியாக ஆர்த்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர் செல்வராஜ், அழகாபுரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் வந்து விசாரித்தனர். 

 

 

முதல்கட்ட விசாரணையில், அவர்கள் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். 

 

 

அதில், ''கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும், அந்த கடிதத்தில், கடன் கொடுத்தவர்கள் பெயர்களையும், உறவினர்கள் சிலரின் செல்போன் எண்களையும் குறிப்பிட்டு இருந்தனர். இதையடுத்து காவல்துறையினர் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.

 

 

மூன்று பேரின் சடலங்களும், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

poison

 

தற்கொலை முடிவு எடுத்த நிலையில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த ஆர்த்தி, கை நரம்புகளையும் அறுத்துள்ளார். கழுத்தும் நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது. விஷம் குடித்தும் சாகாததால், தூக்கிட்டும், கை நரம்புகளை அறுத்தும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. கடிதத்தில் இதுபற்றி விரிவாக எழுதி வைத்திருப்பதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

 

 

அவரிடம் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் வளர்மதி விசாரணை நடத்தி வருகிறார். கந்துவட்டி கொடுமையினால் ஊரைவிட்டே ஓடி வந்து இவர்கள் இவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்களா என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

அதேநேரத்தில், குடும்பத் தகராறில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது காதல் விவகாரத்தில் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 

 

 

இறந்தவர்களில் ஒருவரான ஆஷிகா, கையில் பிளேடால் அறுத்துள்ளார். அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் உடை முழுவதும் ரத்தம் பரவி இருந்தது. அதிலிருந்து அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால்தான் அவர் இறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. இதன்மூலம் கடன் தொல்லை மட்டும்தான் இந்த தற்கொலைகளுக்கு காரணமாக என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது..

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.