Skip to main content

‘பணம் கொடுக்காத கணவன்... கட்டையால் தாக்கிய மனைவி’ - போலீஸ் விசாரணை

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

 wife beaten husband with a stick-Police investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பிள்ளையார்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது தனசேகரன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகரன் தினசரி உழைத்துச் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தில் குடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவர்களது 6மாத குழந்தையான நித்ராவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

அவரது மனைவி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனது கணவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தனசேகரன் 50 ரூபாய் மட்டும் கொடுத்து மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். 50 ரூபாய் கொண்டு குழந்தைக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்று கணவரிடம் கூடுதலாகப் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரியா மது குடிப்பதற்கு மட்டும் அதிக பணம் செலவழிக்க முடிகிறது, குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை அதை சரி செய்வதற்கு 50 ரூபாய் போதுமா, இந்தப் பணத்திற்கு எந்த டாக்டர் சிகிச்சை அளிப்பார் என்று கேட்டுள்ளார்.

 

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில் அவர், மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் அடியைத் தாங்க முடியாத மனைவி ஒரு கட்டத்தில் அருகில் கிடந்த மரக் கட்டையால் தனசேகரன் தலையில் தாக்கியுள்ளார். இதில் தனசேகர் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். தனது மனைவி மண்டையை உடைத்தது சம்பந்தமாக மணலூர் பேட்டை காவல் நிலையத்தில் தனசேகரன் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.