Skip to main content

ஆறு ஆண்டுகள் கழித்து கணவனை கொன்ற வழக்கில் மனைவி கைது... கணவன் சடலம் தோண்டியெடுப்பு!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

கடலூரில் கணவனை கொலை செய்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்த மனைவியையும், அதற்கு உதவியது அந்த பெண்ணின் கணவருடைய சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகை மாவட்டம் கூழையாறை சேர்ந்தவர் முருகதாஸ். இவருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சுமிதா என்பவருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கடலூர் துறைமுகம் அருகே உள்ள முத்துநகர் சிங்காரத்தோப்பு என்ற இடத்தில் திருமணத்திற்குப் பிறகு வசித்துவந்தனர். இவர்களுக்கு 2 மகன்களும் இருந்த நிலையில் இதனையடுத்து வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிக்கலாம் என்று நினைத்த முருகதாஸ் சவூதி அரேபியாவிற்கு சென்று வேலை பார்த்து வந்தார்.

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முக்கியமான உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார் முருகதாஸ். ஊருக்கு வந்த முருகதாஸ் அப்போது காணாமல் போயுள்ளார். அவர் காணாமல் போன சிலநாட்களில் முருகதாஸின் மனைவி சுமிதாவும் சகோதரர் சுமேர் என்பவரும் மாயமாகியுள்ளனர். மாயமாகிப் போன முருகதாஸை பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று இருக்கலாம் என உறவினர்கள் நினைத்துக் கொண்டனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை சுத்தம் செய்த முருகதாஸ் தாயார் முருகதாஸின் பாஸ்போர்ட் வீட்டில் இருந்ததை பார்த்துள்ளார். தன்னுடைய மகன் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளான் என்று நினைத்திருந்த அந்த குடும்பத்திற்கு இதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஸ்போர்ட் இங்கே இருக்கையில் முருகதாஸ் வெளிநாடு சென்றிருக்க சற்றும் வழியில்லை அப்படியானால் முருகதாஸ் என்ன ஆனார் எங்கே  மாயமாகி போனார் என சந்தேகம் எழுந்தது.

 

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore Wife arrested for bad incident  her husband six years later in cuddalore

இதனையடுத்து பாஸ்போர்டோடு எஸ்பி அலுவலகத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இதையடுத்து முதுநகர் போலீசார் தனிப்படை அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் சுமிதாவும் சுமேரும்  ஊருக்கு வந்து முருகதாஸின் இரண்டாவது மகனை அழைத்துச் சென்றுள்ளனர். இதையறிந்த சிலர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உறவினர்கள் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தபோது சுமிதாவும் கடந்த 4 ஆண்டுகளாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore


அங்கு சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் பிடித்து செவ்வாய்க்கிழமையன்று கடலூருக்கு அழைத்துச் வந்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் கடலூர் துணை சூப்பிரண்டு சாந்தி விசாரணை மேற்கொண்டபோது முருகதாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர் வெளிநாட்டில் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு சகோதரர் சுமேர் அடிக்கடி சென்றதன் காரணமாக அண்ணியுடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது தவறாக உறவாக மாறியுள்ளது. 

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore


இதனை கடந்த 2013 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தபோது முருகதாஸின் கவனத்திற்கு வர மனைவியையும், அவரது சகோதரரையும் கண்டித்துள்ளார்.  இதனால் தங்களது உறவுக்கு முருகதாஸ் தடையாக இருப்பார் என எண்ணி இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் புதைத்ததாக வைத்துள்ளனர். இந்நிலையில் முருகதாஸின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் ஒரு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore


அவற்றை ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் முருகதாஸை கொன்ற மனைவி சுதாவையும், சகோதரரையும் கைது செய்துள்ளனர்.  6 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி கணவனை கொலை செய்தது தெரியவந்ததும், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டதும், சடலம் தோண்டி எடுக்கப்பட்டதும் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.