கடலூரில் கணவனை கொலை செய்துஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்த மனைவியையும், அதற்கு உதவியது அந்த பெண்ணின் கணவருடையசகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

நாகை மாவட்டம் கூழையாறை சேர்ந்தவர் முருகதாஸ். இவருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சுமிதா என்பவருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கடலூர் துறைமுகம் அருகே உள்ள முத்துநகர் சிங்காரத்தோப்பு என்ற இடத்தில்திருமணத்திற்குப் பிறகு வசித்துவந்தனர். இவர்களுக்கு 2 மகன்களும் இருந்த நிலையில்இதனையடுத்து வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிக்கலாம் என்று நினைத்த முருகதாஸ் சவூதி அரேபியாவிற்கு சென்று வேலை பார்த்து வந்தார்.

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முக்கியமான உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார் முருகதாஸ். ஊருக்கு வந்த முருகதாஸ்அப்போது காணாமல் போயுள்ளார். அவர் காணாமல் போன சிலநாட்களில்முருகதாஸின் மனைவி சுமிதாவும் சகோதரர் சுமேர்என்பவரும் மாயமாகியுள்ளனர். மாயமாகிப் போன முருகதாஸைபலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று இருக்கலாம் என உறவினர்கள் நினைத்துக் கொண்டனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை சுத்தம் செய்த முருகதாஸ் தாயார் முருகதாஸின்பாஸ்போர்ட் வீட்டில் இருந்ததை பார்த்துள்ளார். தன்னுடைய மகன் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளான் என்று நினைத்திருந்த அந்த குடும்பத்திற்கு இதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஸ்போர்ட் இங்கே இருக்கையில் முருகதாஸ் வெளிநாடு சென்றிருக்க சற்றும் வழியில்லை அப்படியானால் முருகதாஸ் என்ன ஆனார் எங்கே மாயமாகி போனார் என சந்தேகம் எழுந்தது.

Advertisment

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore Wife arrested for bad incident  her husband six years later in cuddalore

இதனையடுத்து பாஸ்போர்டோடு எஸ்பி அலுவலகத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இதையடுத்து முதுநகர் போலீசார் தனிப்படை அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் சுமிதாவும் சுமேரும்ஊருக்கு வந்து முருகதாஸின்இரண்டாவது மகனை அழைத்துச் சென்றுள்ளனர். இதையறிந்த சிலர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உறவினர்கள்செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தபோது சுமிதாவும் கடந்த 4 ஆண்டுகளாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore

Advertisment

அங்கு சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் பிடித்து செவ்வாய்க்கிழமையன்று கடலூருக்கு அழைத்துச் வந்தனர்.கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் கடலூர் துணை சூப்பிரண்டு சாந்தி விசாரணை மேற்கொண்டபோது முருகதாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர் வெளிநாட்டில் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு சகோதரர் சுமேர்அடிக்கடி சென்றதன்காரணமாக அண்ணியுடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது தவறாக உறவாக மாறியுள்ளது.

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore

இதனை கடந்த 2013 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தபோது முருகதாஸின் கவனத்திற்கு வர மனைவியையும், அவரது சகோதரரையும் கண்டித்துள்ளார். இதனால் தங்களது உறவுக்கு முருகதாஸ் தடையாக இருப்பார் என எண்ணி இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் புதைத்ததாக வைத்துள்ளனர். இந்நிலையில் முருகதாஸின்உடல் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் ஒரு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

Wife arrested for bad incident  her husband six years later in cuddalore

அவற்றை ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் முருகதாஸைகொன்ற மனைவி சுதாவையும், சகோதரரையும் கைது செய்துள்ளனர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி கணவனை கொலை செய்தது தெரியவந்ததும், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டதும், சடலம் தோண்டி எடுக்கப்பட்டதும்அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.