Skip to main content

மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கூலித்தொழிலாளி!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

wife and husband incident namakkal police investigation

 

நாமக்கல் அருகே பலமுறை கண்டித்தும் ரகசிய காதலனுடனான தொடர்பைக் கைவிடாததால் ஆத்திரத்தில் மனைவியைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த கூலித்தொழிலாளியைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நவணியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (வயது 22). காதலித்துவந்த இவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். நந்தினியின் சொந்த ஊர், நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டி ஆகும். 

 

இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களாக நந்தினி, செல்ஃபோனில் வேறொரு வாலிபருடன் நீண்ட நேரம் பேசிவந்துள்ளார். அவரை ரகசியமாகக் கண்காணித்துவந்த கணவன், உள்ளூரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் மனைவிக்குத் தவறான தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தார்.

 

இதையடுத்து தமிழ்செல்வன், தவறான தொடர்பை கைவிட்டுவிடும்படி மனைவியைக் கண்டித்துள்ளார். அப்போதைக்குக் கணவனுக்கு அடங்கி நடக்கும் மனைவிபோல கேட்டுக்கொண்ட நந்தினி, கணவர் இல்லாத நேரங்களில் தன் ரகசிய காதலனை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) காலையில் தமிழ்செல்வன், அவசர வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது போல நந்தினி, உடனடியாக தன் ரகசிய காதலனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். 

 

திடீரென்று வீட்டிற்கு வந்த கணவன், மனைவியும், அவருடைய ரகசிய காதலனும் இருந்த கோலத்தைப் பார்த்து ஆத்திரமடைந்தார். இதை எதிர்பாராத அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். 

 

ஆத்திரத்தில் இருந்த தமிழ்செல்வன், மனைவியை சரமாரியாகத் தாக்கினார். மேலும், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் நந்தினி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

 

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைத் பார்த்த தமிழ்செல்வன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் நிலைய காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

சடலம், உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தலைமறைவான தமிழ்செல்வனை தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள்; புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Husband lost their life over wife passed away

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கணவன் மனைவிக்கிடையே தகராறு; மன வேதனையில் மாமியார் எடுத்த விபரீத முடிவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Woman lost their life in grief

ஈரோடு சி.என்.சி காலேஜ் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (49). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ஜனனி. மேகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தாய் மேகலா வீட்டிற்கு வந்துவிட்டார் ஜனனி. தனது மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வந்ததால் மேகலா கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவிற்கு ஒரு விசேஷத்திற்காக ஜனனி சென்றுவிட்டார். வீட்டிலிருந்த மேகலா திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேகலா தங்கி இருக்கும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மேகலா கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முன்பே மேகலா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.