Skip to main content

ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது ஏன்..?

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Why the Rs 25 crore dam broken.. ?

 

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த தகவலையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ.கணேசன் என ஏராளமான தி.மு.க.வினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டுவந்து அனைவரும் உடைந்த அணைக்கட்டுப் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போராட்டம் நீடித்தது. இதையடுத்து, கடலூர்  துணை ஆட்சியர் ஜெகதீஸ்வரன், கூடுதல் எஸ்.பி. பாண்டியன் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில்  போராட்டம் முடிவுக்கு வந்தது. 

 

இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டப் பிறகு மூன்று முறை அணை நிரம்பியுள்ளது. அணை உடையவில்லை. அருகே உள்ள தடுப்பு சுவர் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. அது இயற்கையாக ஏற்பட்டதா அல்லது மனித தவறினால் ஏற்பட்டதா என்பது குறித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

சேதமடைந்த தடுப்பு சுவர் பணிகளை முடிப்பதற்காக சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தடுப்பு சுவர் கட்டப்படும்” என்று கூறினார். 

 

இதையடுத்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகர், தடுப்பணை உடைந்தது சம்பந்தமாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி ஆகிய நான்கு அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, இந்தத் தடுப்பணை கட்டிய ஒப்பந்த நிறுவனம் நாமக்கல்லைச் சேர்ந்த பிரமுகருடையது என்றும், இந்த நிறுவனம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு குடியிருப்பையும் தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நான்கு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளையும் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது என்றும் தெரிய வந்தது. எனவே தரமில்லாமல் கட்டப்பட்டதால் தடுப்பணை உடைந்தது என்ற குற்றச்சாட்டையடுத்து மேற்படி நிறுவனம் செய்து வரும் பணிகளில், எந்த அளவுக்கு தரமாக கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது என்பதை ஆய்வு செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.