Skip to main content

பாமகவுக்கு ராஜ்ய சபா பதவி ஏன்?  ஆனந்தராஜ் கேள்வி 

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ஆனந்தராஜ். 
 

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ஜெயலலிதா சொன்ன பிறகு 50 நாட்கள் சுற்றுப் பயணம் செய்தேன். ஜெயலலிதா தேனீயைப்போல சிறுக சிறுக சேர்த்த ஓட்டுக்கள். பாமகவுக்கு 7+1 என்று யார் கொடுத்தார்கள். மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர். அதனை எப்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாமகவுக்கு கொடுக்கலாம். வாக்களித்தது அதிமுகவுக்கு, பதவி தருவது வேறொரு கட்சிக்கா? 

 

actor Anandraj



என்னைப்போல் அதிமுகவில் உழைத்தவர்கள் எத்தனைப் பேர் உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சிக்குள் இருப்பவர்களுக்கு தர வேண்டும். இது அதிமுக தொண்டர்களுக்கும், இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களுக்கும் செய்யும் துரோகம்தானே.
 

பாமகவுக்கு தந்திருக்கிறார்கள். ஒருவேளை அன்புமணி தோற்றுவிட்டால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவரிடம் கொடுத்துவிடுவார்கள். அன்புமணி ஜெயித்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு யாருக்காவது கொடுத்துவிடுவார்கள். மருத்துவர் ராமதாஸோ அல்லது அன்புமணியோ இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எங்களது குடும்பத்தினருக்கு பயன்படுத்த மாட்டோம். எங்களது கட்சி தொண்டர்களுக்கு தருவோம் என்று சொல்ல வேண்டும். சொல்லுவாரா என்று தெரியவில்லை. கூட்டணி என்ற பெயரில் அதிமுகவின் வாக்கு வங்கி பிற கட்சிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.