Skip to main content

ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை! காவல்துறையின் கைகள் கட்டப்பட்டதா?-கி.வீரமணி பகீர் பேட்டி! !

Published on 29/09/2018 | Edited on 30/09/2018

 

k veeramani

 

திண்டுக்கல் மாவட்ட திராவிட கழகம் சார்பில் பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி முன் கூட்டியே திண்டுக்கல் வந்தவர். திண்டுக்கல் நாயுடு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி,  மாணவ மாணவிகள் பங்கு பெற்ற அறிவியல் கண்காட்சி, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை கவிதை போட்டிகளை பார்வையிட்டு கலந்து கொண்டார்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தி.க.தலைவர் வீரமணி, சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பு வரவேற்கதக்கது. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தீர்ப்பு இறுதியானது இதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். 

தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் ஆட்சி மனிததர்ம ஆட்சியா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

 

ஸ்காட்லாந்து போலீஸ்க்கு  இணையானது தான் நமது தமிழக காவல்துறை இருக்கும்போது ஹெச்.ராஜாவை கைது செய்வதற்காக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டிருந்தும் இதுவரை கைது செய்ய வில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த ஹெச் ராஜா தமிழக ஆளுனரை சந்தித்துள்ளார்.  அப்படியானால் தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? சட்டத்தின் கைகளை கட்டியது யார்?  அப்படி கட்டப்பட்ட சட்டத்தின் கைகளை எப்போது அவிழ்த்து விடுவார்கள் தமிழக அரசை பொருத்தவரை மத்திய அரசின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு என்று சொன்னாலே தமிழக அரசு உட்கார்ந்து விடுகிறது. 

 

சமீபகாலமாகவே தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகிறது. பிஜேபி.ஆர், எஸ்.எஸ்.ஆகிய காக்கி அமைப்புதான் அதைசெய்து வருகிறது. இதற்கு பின்னணியில் ஹெச்.ராஜா இருக்கிறார் என்பது தான் உண்மை என்று கூறினார். அதைத்தொடந்து இரவு திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.