Skip to main content

ஈரோட்டுக்கு திடீர் விசிட் அடிக்கும் ஆளுநர் -வெளியான தகவல்!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Governor

 

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டல பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமூக மக்கள் தங்களின் அடையாள வீரனாக, தலைவனாக கொண்டாடுவது, சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையை. வெளிவராத சின்னமலையின் தியாக வரலாற்றை ஈரோட்டை சேர்ந்த ஆய்வாளர் புலவர் ராசு என்பவர் வெளிக்கொண்டு வந்தார். சின்னமலைக்கு புகழ் செய்யும் பொருட்டு மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும் போது தீரன் சின்னமலையின் பூர்வீகமான ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை கிராமத்தில் சின்னமலையின் சிலை, நினைவு மணிமண்டமும் சென்னையில் சிலை அமைத்தும் பெருமை சேர்த்தார்.

 

வெப்படையை சேர்ந்த கொங்கு செங்கோட்டையன் என்பவர் முயற்சியால் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு தனியார் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்டு அச்சமூக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து E.R.ஈஸ்வரன் தலைமையில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீரன் சின்னமலை புகழை பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்றது. இதன் பலனாக கடந்த 20 ஆண்டுகளாக சின்னமலையின் நினைவு தினம் உள்ளுர் விடுமுறை விடப்பட்டு அரசு நிகழ்வாக நடத்தப்படுகிறது.

 

03.08.2022 (ஆடி18) புதன்கிழமை தீரன் சின்னமலையின் 217 வது ஆண்டு நினைவு தினம் ஒவ்வொரு அரசில் கட்சி மற்றும் அமைப்பு தலைவர்கள் நேரில் வந்து புகழ் அஞ்சலி செய்ய வழக்கம்போல் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவ்வருடம் திடீரென முக்கிய வி.வி.ஐ.பி. வருகிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காகவே 3 ந் தேதி காலை சென்னையிலிருந்து ஓடாநிலை கிராமத்திற்கு வருகிறார். மதியம் 12 மணி முதல் 1.30 வரை ஆளுநர் ரவி அவர் சிலைக்கு மாலை அணிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆளுநருடன், பா.ஜ.க. அண்ணாமலை மற்றும் ஆதீன, சமய தலைவர்கள் சிலரும் உடன் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.