அவர் ஒரு விவசாயி. அவர்கள் வீட்டில் கார் நிறுத்துவதற்கு இடம் இருக்கப் போவதில்லை. அவர்களே குடிசையில் இருப்பார்கள். அந்த காரை எங்கு நிறுத்தப் போகிறார்கள். அந்த காருக்கு போடுவதற்கு பெட்ரோல் எங்கே அவர்களுக்கு இருக்கப் போகிறது. அந்த காரை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நல்ல ஒரு டிராக்டர் வாங்கி கொடுங்கள். டிராக்டரில் கேரியர், கலப்பை எல்லாம் போட்டு ஒரு 10 லட்சம் 12 லட்சம் ரூபாய் இருக்க போகிறது. முதல் பரிசு டிராக்டர் வாங்கி கொடுங்கள். அந்த டிராக்டரை வைத்து அவன் சம்பாதிப்பான் அல்லது வாடகைக்கு விட்டுகூட சம்பாதிப்பான். அது ஒரு தொழில். அதில் வருமானம் வரப்போகுது. அதை செய்யுங்கள். சும்மா ஆல்ட்டோ கார் கொடுக்கிறோம், இந்த கார் கொடுக்கிறோம், சோப்பு டப்பா கொடுக்குறோம் என்பதெல்லாம் வேண்டாம். இதுபோன்ற நல்ல பொருள் கொடுங்கள். நல்ல விவசாயம் சார்ந்த பரிசுகளை கொடுங்க'' என புதிய ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார் அன்புமணி.