Skip to main content

‘திராவிட மாடல் என்பதில் மாடல் என்ற ஆங்கிலச்சொல் ஏன்?’ - நீதிமன்றம் கேள்வி

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

'Why is the English word 'model' in the word Dravidian model?-Court question

 

“திராவிட மாடல் என்ற வார்த்தையில் ஏன் மாடல் என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துகிறார்கள்; முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே” என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

 

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 1982 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி தூய தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். இந்த அரசாணையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறைக்கு செயலாளருக்கு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உத்தரவிட்டு பல மாதங்கள் ஆன நிலையில், இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, இது தொடர்பான அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டும் என உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு தொடர்புடைய அலுவலகங்களில் பெயர்ப் பலகைகள் தமிழக அரசின் அரசாணைப்படி தமிழில் உரிய முறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அரசாணைப்படி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வைப்பதில்லை. தனியார் நிறுவனங்களின் மீது தொழிலாளர் நலத்துறையே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

 

அதற்கு நீதிபதிகள், “தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையிலேயே கடுமையாகப் பாடுபட வேண்டும். சட்டக்கல்லூரி உட்பட கல்லூரிகளில் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். அதோடு வழக்கு தொடர்பாக குறிப்பு எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டப் புத்தகங்கள் தமிழில் கொண்டுவரப்பட வேண்டும். தற்போது 'திராவிட மாடல்' என்ற வார்த்தை பரிச்சயமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாடல் என்று ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த மாடல் என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே” எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தமிழக அரசு ஆணையின்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப் பலகை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.