Skip to main content

'பணக்காரர்களை கண்டால் அரசு பதுங்குவது ஏன்?'-பெ.சண்முகம் கேள்வி

Published on 26/05/2025 | Edited on 26/05/2025
'Why does the government that uses bulldozers against the poor hide when it sees the rich?' - CPM's Shanmugam questions

அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் வீடுகள், குடியிருப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் அனகாபுத்தூர் மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு சென்று மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்