Skip to main content

இணையதளத்தில் தனியார் பள்ளி கட்டணம் வெளியிடாதது ஏன்?  அரசை வலியுறுத்த ஸ்டாலினுக்கு இளையதலைமுறை கோரிக்கை

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
s s

 

தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை வரையறுக்க அமைக்கப் பட்ட குழுவை முறையாக செயல்படுத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை வலியுறுத்த வேண்டும் என்று இளையதலைமுறை அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது.  


 
தனியார் பள்ளியில் கட்டண கொள்ளையை தடுக்க கல்வி கட்டண நிர்ணய குழுவை அமைக்க அரசை வலியுத்த கோரி இளையதலைமுறை அமைப்பு மு.க.ஸ்டாலினை சந்தித்தது. அது குறித்து அந்த அமைப்பை சேர்ந்த சங்கர்,  

“தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வரும் நிலையில் திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்கும் வகையில் “கல்வி கட்டண நிர்ணய குழு” செயல்படுத்தப் பட்டது. ஆனால் தற்போது அந்த குழுவானது சரியாக செயல்படாமல் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தனியார் பள்ளி கட்டண விவரங்களை ஏப்ரல் 30ஆம் தேதிகுள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. கல்வி கட்டண நிர்ணய குழுவை நேரில் சென்று வலியுத்தி இருந்தோம்.  ஆனால் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க பட இருக்கிறது. மாசிலாமணி குழு நியமித்தே ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இது வரை எதுவும் செய்யவில்லை. பள்ளிக்கல்வி துறையும் இதுவரை இணையதளத்தில் தனியார் பள்ளி பள்ளி கட்டணம் வெளியிடாமல் இருக்கிறது. திமுக தரப்பில் இதை அரசுக்கு வலியுறுத்த கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்து இருக்கிறோம்.

 

திமுக ஆட்சி காலத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் இதற்குள் அடங்கும் என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் சி‌பி‌எஸ்‌சி தரப்பு நீதிமன்றம் சென்றது.  உயர் நீதிமன்றம் சி‌பி‌எஸ்‌சி பள்ளிகளுக்கும் சேர்ந்து நிர்ணயிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து சி‌பி‌எஸ்‌சி தரப்பு உச்ச நீதிமன்றதில் மேல் முறையீடு செய்தது. 2016 உச்ச நீதிமன்றம் கட்டண நிர்ணயம் தேவை இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதை எதிர்த்து தமிழக அரசு எந்த விதமான மேல்முறையீடும் செய்யாமல் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது” என்றார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.