Advertisment

ரஜினியிடம் கேட்ட கேள்வியை சரத்குமாரிடம் ஏன் கேட்கவில்லை? இளைஞரின் விளக்கம்

ra sa

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது மருத்துவனையில் போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ் என்ற இளைஞர் தங்களை பார்க்க வந்த ரஜினிகாந்தை பார்த்து ''யார் நீங்கள்?'' எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாக பேசப்பட்டது.

Advertisment

sara

இந்நிலையில் இன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் இளைஞர் சந்தோஷ், சரத்குமாரைப்பார்த்து நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பவில்லை. இது குறித்து சந்தோஷ்குமாரே செய்தியாளர்களை பார்த்து, ‘’நேற்று ரஜினியை பார்த்து யார் நீங்கள் என்று கேட்ட நான் இன்று சரத்குமார் சாரைப்பார்த்து ஏன் அப்படி கேட்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

Advertisment

sa ku

எங்களுடைய 100 நாள் போராட்டத்தில் ஒரு நாள் பங்கெடுத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் நாங்கள் குடித்துக்கொண்டிருக்கும் மிகவும் மோசமான அந்த தண்ணீரையே குடித்த மனிதர் அவர். அதனால்தான் அவரை நீங்கள் யார் என்று கேட்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

sa ku

rajinikanth sarathkumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe