Advertisment

கோபியர் கொஞ்சிய தமையன் பிக்பாஸில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார்?

you

Advertisment

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என்பதால் சனிக்கிழமை நேற்று பாலாஜி வெளியேற்றப்பட்டார். இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்படுகிறார்.

எந்த ஒரு பிக் பாஸ் போட்டியிலும் இல்லாத அளவிற்கு, இத்தனை பெண் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஆண் போட்டியாளர் பாலாஜி இருக்கிறார். என்ன ஒன்று....கோபியர் கொஞ்சும் ரமணாவாக இல்லாமல் அவர் கோபியர் கொஞ்சும் தமையனாக இருக்கிறார் என்று சென்ற வாரம் நிகழ்ச்சியில் சொல்லி கமல்ஹாசன் வியந்தார்.

வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கமல்ஹாசன் அறிவித்ததும், பாலாஜி கொஞ்ச நேரம் அப்செட். அவரது முகம் இறுக்கமாக இருந்தது. பின்னர் கஷ்டப்பட்டு சிரித்தபடியே வெளியேறினார். ’இதே கடந்த பிக்பாஸாக இருந்தால் நீங்கள் இறுதிபோட்டியாளர். இந்த சீசனில் 5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அந்த வாய்ப்பு உங்களுக்கு நழுவியிருக்கிறது’என்று கமல் ஆறுதல் கூறியபோதும், கஷ்டப்பட்டு சிரித்தார் பாலாஜி.

Advertisment

இறுதிப்போட்டியில் பங்கேற்று ஜெயிக்க வேண்டும் நினைக்கும் பாலாஜி, கடந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் எதிலுமே ஆர்வம் காட்டாமல் இருந்து, அதனால் எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாமல் போனதாலும், இன்னமும் புறம்பேசிக்கொண்டிருப்பதாலும், ரசிகர்கள் அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

balaji bigboss vijay tv yasiha ananth
இதையும் படியுங்கள்
Subscribe