தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்எப்பொழுது நடக்கும்மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சிதேர்தல் என்றகேள்விஎழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியதேர்தல் ஆணையம்திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலைஇன்னமும் தயார் செய்து கொடுக்காததால்மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதிகளைஇன்னும் முடிவு செய்யவில்லைஎனமாநிலதேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்தரமேஷ்என்பவர்உயர்நீதிமன்றகிளையில்பொதுநல வழக்கு ஒன்றைதாக்கல் செய்திருந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தேர்தல் ஆணையம்ஜனநாயக அடிப்படையில் செயல்படாமல் அரசியல் நோக்கோடுசெயல்படுகிறது. நீதிமன்றத்தில்கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் டிசம்பர் 9 ல்மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் மகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மகராட்சி, நகராட்சிகள் தான் எனவே 15 நாட்களுக்குள் மகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தலைமாநிலதேர்தல் ஆணையம்அறிவிக்கவேண்டும் எனநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனஅந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில்தேர்தல் ஆணையம் சார்பில்ஆஜரானவழக்கறிஞர்,இந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலைஇன்னமும் தயார் செய்து கொடுக்கவில்லை. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியஇன்னும் தயாராகாததால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதிகளைஇன்னும் முடிவு செய்யவில்லைஎனவே இந்த வழக்கில்பதில்மனுதாக்கல் செய்ய கூடுதல்அவகாசம் வேண்டும் எனகோரிக்கை வைத்தார்.இந்த வழக்கினைவிசாரித்தநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்குமூன்று வாரம் காலஅவகாசம் கொடுத்துவழக்கைஒத்திவைத்தது.