Skip to main content

''இருக்கிற பதவியும் போச்சுன்னா யார் கொடுப்பா...''- பெருவுடையார் குடமுழுக்கை புறக்கணித்த ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர்!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் வரலாற்றில் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் பேரரசன் ராஜராஜனின் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழில் நடந்த வேண்டும் நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு யாகசாலை முதல் கருவறை வரை, நேற்று வரை ஒலித்த தமிழ் இன்று பிரமாண்ட கலசத்திலும் ஒலித்தது.

இந்த தமிழ் ஒலியை கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால் மக்களுக்கான எந்த ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவில்லை. சாலை ஓரங்களில் கும்பகோணம் கலைக் கல்லூரி மாணவர்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்க வைக்கும் ஓவியங்களை தீட்டினார்கள். அந்த ஓவியங்களுக்கு மெருகூட்டக் கூட சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களில் புல் தரைகளை காணமல் போய் கட்டாந்தரையாக காணப்பட்டது.

கருவறையிலும், கலசத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதை காண சிவ பக்தர்கள் மங்கள இசைக் கருவிகளுடன் வந்து இசைத்து பக்தர்களை மகிழச் செய்தனர். வி.பி.ஐ.பி நுழைவாயில் சிவகங்கை பூங்கா வழியாக திறக்கப்பட்டிருந்தது. அங்கே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் சண்டைதான் நடந்தது.

 

Who will give you the position of the incumbent... who ignored

 

தமிழக முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருவதை விரும்பவில்லை என்று தொடக்கத்தில் இருந்து நக்கீரன் சொல்லி வந்தது உண்மை தான் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஆர்.காமராஜ் வரவில்லை., வைத்திலிங்கம் எம்.பி. திருமங்கலக்கோட்டையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனால் குடமுழுக்கு நடக்கும் இடத்திற்கு வரவில்லை. ஆனால் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மட்டும் அரசியல் படைகளோடு வராமல் குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்தார். எந்த பதவியும் இல்லாத மாஜி எம்.பி. பரசுராமன் வந்தார். இவ்வளவு தான் அ.தி.மு.க பட்டியல்.

ராஜராஜன் ஆயிரமாவது விழாவை சிறப்பாக நடத்திய திமுகவினராவது மூடநம்பிக்கையை ஒழித்துவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ நீலமேகம், திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன், ஒரத்தநாடு எம்.எல்.ஏ புல்லட் ராமச்சந்திரன் என்று யாருமே அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
 

Who will give you the position of the incumbent... who ignored

 

பாஜகவில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் இல.கணேசன் வந்திருந்தனர். திரை நட்சத்திரம் ஆர்.பார்த்திபன் வந்திருந்தார்.

ஆர்.பார்த்திபன்.. தமிழ் மன்னன் கட்டிய கோயிலில் தமிழ் ஒலித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இனி தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்றார்.

 

Who will give you the position of the incumbent... who ignored

 

ஏன் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் வரவில்லை.. வந்தால் பதவி போகுமா? என்ற வழக்கமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில்.. தஞ்சை மக்கள் கூறும் போது.. அரசியல்வாதிகளுக்கு இன்னும் மூடநம்பிக்கை போகவில்லை. தி.மு.க ஆட்சியில் குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகும் ஆட்சி தொடர்ந்தது. ராஜராஜன் ஆயிரமாவது நிகழ்ச்சி நடந்தது அதன் பிறகும் ஆட்சி தொடர்ந்தது. ஆனால் தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தார்கள். 

அதேபோலதான் அதிமுகவினருக்கும். அவர்கள் நினைப்பது எல்லாம் பதவிகள் போச்சுன்னா மறுபடியும் யாரு வாங்கிக் கொடுப்பாங்க என்ற கேள்வி தான் அவர்களிடம் எழுந்து நிற்கிறது. மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டியவர்களே அதை மக்களிடம் வளர்ப்பது மூடத்தனமாக தான் தெரிகிறது என்றனர்.

தமிழ் ஒலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்று போராடியவர்களின் ஒருவரான பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.. பெரிய கோயிலில் ஓதுவார்கள் குடம் தூக்கி தண்ணீர் ஊற்றியதும், தமிழ் ஒலியை கேட்டதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சி என்பது தமிழ் ஒலிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த அனைவருக்குமான மகிழ்ச்சியாக பார்க்கிறேன். அடுத்து வரலாற்று சிறப்பு மிக்க கோயிலை கட்டிய பேரரசன் ராஜராஜன் சிலையை கோயிலுக்குள் வைக்கவும், உடையாளூரில் ராஜராஜன் நினைவிடம் அமைக்கவும் குழு அமைத்து இயக்கம் நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.