Who will comfort us who are drowning in a sea of ​​tears? -OPS, EPS mourn Madhusudhanan's death

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80)உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது காலமானார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

1991 ஆம் ஆண்டு அதிமுகவில்ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராகஇருந்த மதுசூதனன், 2010 ஆண்டு முதல் அதிமுகவின்அவைத்தலைவராக செயலாற்றி வந்தார். இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுகபிரிந்திருந்த நிலையில், கட்சியின் சின்னம், கொடி ஆகியவையைதேர்தல் ஆணையம் மதுசூதனிடமேவழங்கியது. மதுசூதனன் இருக்கும் வரை அவர்தான் அதிமுகவின்அவைத்தலைவர் என ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், கடைசி வரை அது பின்பற்றப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனாவால்பாதிக்கப்பட்ட மதுசூதனன் சிகிச்சைக்கு பின் தேறியிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கட்சி வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று தண்டையார்பேட்டையில் இருந்த வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில்அப்போலோ மருத்துவமனையில்உடல்நலக் குறைவுகாரணமாக சேர்க்கப்பட்டிருந்த மதுசூதனுக்குதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,தற்பொழுது அவர் காலமாகியுள்ளார். அவரது மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பு என அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பில் இருந்தும் இரங்கல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

Advertisment

Who will comfort us who are drowning in a sea of ​​tears? -OPS, EPS mourn Madhusudhanan's death

இந்நிலையில் அதிமுகதலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'இயக்கத்தின் தொடக்க நாள் முதல் இறுதிவரை ஓயாது உழைத்தவர்மதுசூதனன். தொண்டர்களை எப்பொழுதும் தன்தோள்களில்வைத்துக் கொண்டாடிய அதிமுகவேர்களில் ஒருவர் அவர். கழகத்தின் தூண் சரிந்ததேஎன கண்ணீர் கடலில் மூழ்கியுள்ள நமக்கு யார் ஆறுதல் சொல்வார். மதுசூதனன் மறைவையொட்டி ஆகஸ்ட் 7 ஆம்தேதி வரை 3 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்படும்.அதிமுககொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.