'Who...? Who...? Who...?- The court raised questions about the Kallakurichi violence incident!

கள்ளக்குறிச்சியில்தனியார்பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம்தொடர்பாகபள்ளியின் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில்தனியார்பள்ளியின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அதேபோல் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. பல மணி நேரம்போலீசார்தடியடி நடத்தி போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும்,போலீசார்உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், தற்போது நடைபெற்றுள்ளபிரேதபரிசோதனை அறிக்கை தகவல்களில் தெளிவு இல்லை என்பதால் இரண்டாவது முறை மாணவியின் உடலைஉடற்கூறாய்வுசெய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குசிபிசிஐடிக்குமாற்றப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 108 பேர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படஇருக்கின்றனர். கள்ளக்குறிச்சி சிறார் சிறப்பு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி 2 ஆம் எண் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்ஆஜர்படுத்தப்படஉள்ளனர்.

Advertisment

highcourt chennai

மறுபுறம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது. அதில் மாணவர்களின் டி.சி யை எரித்தது யார்? யார் இதற்கானஉரிமையைகொடுத்ததுஎனகேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வன்முறை திடீர் கோபத்தால் ஏற்பட்ட வன்முறை போல் தெரியவில்லை, திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. இந்த வன்முறையின் பின்னணியில் இருப்பது யார்? நீதிமன்றத்தை நாடிவிட்டு ஏன்போராட்டதைகையில் எடுத்தீர்கள்எனகேள்வி எழுப்பினர். காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்பொழுது மனுதாரர் (ராமலிங்கம்) தரப்பில் வன்முறைக்கும் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லைஎனத்தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 'உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது? இந்தசம்பவத்திற்குசிலர் மட்டுமே காரணமல்ல. வன்முறை சம்பவத்தைபொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்கும்' என தெரிவித்து மாணவியின் உடலை வீடியோ பதிவுடன்மறு கூறாய்வுசெய்ய நீதிமன்றம் செய்ய அனுமதி அளித்தது. மேலும் உடற்கூராய்வின் பொழுது மாணவியின் தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கியது நீதிமன்றம். அதேநேரம் வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Advertisment