Skip to main content

வேலூர் தொகுதி வேட்பாளர்களாகப்போவது யார், யார் ?

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் போன்றவை அறிவித்து மனுக்களை வாங்கி முடித்துள்ளன. சில கட்சிகள் நாட்களை நீட்டித்து மனுக்களை வாங்கி வருகின்றன.

 

 Who is the Vellore constituency Candidate?

 

இந்நிலையில் இந்த தொகுதி நம் கட்சிக்கு கிடைத்தால் நாம் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்கிற கோதாவில் ஒவ்வொரு கட்சியிலும் நிர்வாகிகள் குதித்துள்ளனர். அதன்படி வேலூர் பாராளமன்ற தொகுதி வேட்பாளராகப்போகும் கேட்பாளர்கள் யார் ?, யார் என விசாரணையில் இறங்கினோம்.

 

 

அமமுக

 

தற்போது சிட்டிங் எம்.பியாக செங்குட்டுவன் உள்ளார். இவர் ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி அணி என தாவி தாவி இப்போது தினகரன் அணியில் உள்ளார். மீண்டும் எனக்கு சீட்டே வேண்டாம் என சைலண்டாக உள்ளார். அமமுகவில் முன்னாள் அதிமுக மா.செ சிவசங்கரன், வாசு, முன்னாள் எம்.எல்.ஏ வேலூர் ஞானசேகரன், அணைக்கட்டு கலையரசு போன்றவர்களில் யாராவது ஒருவரை நிறுத்த தினகரன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

 

 

அதிமுக அணி

 

 

அமைச்சர் வீரமணி தனது அண்ணன் கே.சி.அழகிரிக்காக எடப்பாடியிடம் போராடுகிறார். முன்னாள் அமைச்சர் விஜய் எனக்கு தாங்க என கேட்டு வருகிறார். வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட பால்கூட்டுறவு சங்க தலைவர் வேலழகன் உட்பட சிலர் வேட்பாளர்கள் கோதாவில் உள்ளனர்.

 

 

இந்நிலையில் கடந்த முறை இந்த தொகுதியில் தாமரை சின்னத்தில் நின்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போன ஏ.சி.சண்முகம் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். 90 சதவிதம் அவர் வேலூர் தொகுதியில் நிற்பது என்பது முடிவாகியுள்ளது என்கிறார்கள். அவரது ஆதரவாளர்கள்.

 

 

அதிமுக கூட்டணியில் பாஜக 5 தொகுதிகளை வாங்கியுள்ளது. வேலூர் தொகுதியை நமக்கு ஒதுக்கினால், நாமே நிற்கலாம் என்கிற ஆசையில் உள்ளார் முன்னாள் மேயர் கார்த்திகாயினி. மாவட்ட தலைவர் ஆம்பூர் வெங்கடேசனும் ஆசைப்படுகிறார்.

 

 

ஊசலாட்டத்தில் உள்ள தேமுதிக, அதிமுக அணியில் இணையும் பட்சத்தில், இந்த தொகுதி மீது அவர்களுக்கு ஆசையுள்ளது. காரணம் விஜயகாந்த் மச்சான் சுதிஷ் பிறந்த கிராமம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. அதனால் இங்கு போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்பதால் அவர் விரும்புகிறார் என்கிறார்கள். அவர் இல்லாத பட்சத்தில் மா.செ ஸ்ரீதர் கேட்கும் முடிவில் உள்ளார் என்கிறார்கள்.

 

 

 

திமுக அணி

 

 

திமுகவில், திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகன் கதிர்ஆனந்த்க்கு சீட் தாருங்கள் என தலைவர் ஸ்டாலினிடம் கேட்டு வருகிறார். திமுக மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்.பி. முகமதுசகி தனக்கு வேண்டும்மென கேட்கிறார். இதற்கிடையே தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய பிரமுகர்களை சந்தித்து துரைமுருகன் பேசிவருவது கதிர்ஆனந்த் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அவரது கட்சியிலேயே.

 

 

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏணி சின்னத்தில் நிற்கும் அந்த கட்சி வேலூர் தொகுதி வேண்டும் எனக்கேட்கிறது. அந்த கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கும் பட்சத்தில் அதே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அப்துல்பாசித், புதுக்கோட்டையை சேர்ந்த வேலூர் தொகுதியின் முன்னாள் எம்.பி அப்துல்ரகுமானை தேர்வு செய்யலாமா என அரசியல் குழுவில் விவாதித்துவருகின்றனர்.

 

திமுக கூட்டணியில் ஒரு வேளை காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் முன்னாள் எம்.பி ஜெயமோகன் மகனும், சிதம்பரம் ஆதரவாளருமான விஜய் இளஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அஸ்லம்பாஷா போன்றவர்கள் கேட்கும் முடிவில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.