Skip to main content

வேலூர் தொகுதி வேட்பாளர்களாகப்போவது யார், யார் ?

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் போன்றவை அறிவித்து மனுக்களை வாங்கி முடித்துள்ளன. சில கட்சிகள் நாட்களை நீட்டித்து மனுக்களை வாங்கி வருகின்றன.

 

 Who is the Vellore constituency Candidate?

 

இந்நிலையில் இந்த தொகுதி நம் கட்சிக்கு கிடைத்தால் நாம் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்கிற கோதாவில் ஒவ்வொரு கட்சியிலும் நிர்வாகிகள் குதித்துள்ளனர். அதன்படி வேலூர் பாராளமன்ற தொகுதி வேட்பாளராகப்போகும் கேட்பாளர்கள் யார் ?, யார் என விசாரணையில் இறங்கினோம்.

 

 

அமமுக

 

தற்போது சிட்டிங் எம்.பியாக செங்குட்டுவன் உள்ளார். இவர் ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி அணி என தாவி தாவி இப்போது தினகரன் அணியில் உள்ளார். மீண்டும் எனக்கு சீட்டே வேண்டாம் என சைலண்டாக உள்ளார். அமமுகவில் முன்னாள் அதிமுக மா.செ சிவசங்கரன், வாசு, முன்னாள் எம்.எல்.ஏ வேலூர் ஞானசேகரன், அணைக்கட்டு கலையரசு போன்றவர்களில் யாராவது ஒருவரை நிறுத்த தினகரன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

 

 

அதிமுக அணி

 

 

அமைச்சர் வீரமணி தனது அண்ணன் கே.சி.அழகிரிக்காக எடப்பாடியிடம் போராடுகிறார். முன்னாள் அமைச்சர் விஜய் எனக்கு தாங்க என கேட்டு வருகிறார். வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட பால்கூட்டுறவு சங்க தலைவர் வேலழகன் உட்பட சிலர் வேட்பாளர்கள் கோதாவில் உள்ளனர்.

 

 

இந்நிலையில் கடந்த முறை இந்த தொகுதியில் தாமரை சின்னத்தில் நின்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போன ஏ.சி.சண்முகம் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். 90 சதவிதம் அவர் வேலூர் தொகுதியில் நிற்பது என்பது முடிவாகியுள்ளது என்கிறார்கள். அவரது ஆதரவாளர்கள்.

 

 

அதிமுக கூட்டணியில் பாஜக 5 தொகுதிகளை வாங்கியுள்ளது. வேலூர் தொகுதியை நமக்கு ஒதுக்கினால், நாமே நிற்கலாம் என்கிற ஆசையில் உள்ளார் முன்னாள் மேயர் கார்த்திகாயினி. மாவட்ட தலைவர் ஆம்பூர் வெங்கடேசனும் ஆசைப்படுகிறார்.

 

 

ஊசலாட்டத்தில் உள்ள தேமுதிக, அதிமுக அணியில் இணையும் பட்சத்தில், இந்த தொகுதி மீது அவர்களுக்கு ஆசையுள்ளது. காரணம் விஜயகாந்த் மச்சான் சுதிஷ் பிறந்த கிராமம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. அதனால் இங்கு போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்பதால் அவர் விரும்புகிறார் என்கிறார்கள். அவர் இல்லாத பட்சத்தில் மா.செ ஸ்ரீதர் கேட்கும் முடிவில் உள்ளார் என்கிறார்கள்.

 

 

 

திமுக அணி

 

 

திமுகவில், திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகன் கதிர்ஆனந்த்க்கு சீட் தாருங்கள் என தலைவர் ஸ்டாலினிடம் கேட்டு வருகிறார். திமுக மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்.பி. முகமதுசகி தனக்கு வேண்டும்மென கேட்கிறார். இதற்கிடையே தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய பிரமுகர்களை சந்தித்து துரைமுருகன் பேசிவருவது கதிர்ஆனந்த் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அவரது கட்சியிலேயே.

 

 

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏணி சின்னத்தில் நிற்கும் அந்த கட்சி வேலூர் தொகுதி வேண்டும் எனக்கேட்கிறது. அந்த கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கும் பட்சத்தில் அதே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அப்துல்பாசித், புதுக்கோட்டையை சேர்ந்த வேலூர் தொகுதியின் முன்னாள் எம்.பி அப்துல்ரகுமானை தேர்வு செய்யலாமா என அரசியல் குழுவில் விவாதித்துவருகின்றனர்.

 

திமுக கூட்டணியில் ஒரு வேளை காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் முன்னாள் எம்.பி ஜெயமோகன் மகனும், சிதம்பரம் ஆதரவாளருமான விஜய் இளஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அஸ்லம்பாஷா போன்றவர்கள் கேட்கும் முடிவில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்