Skip to main content

யாரு... டாஸ்மாக் மணியா...? -தினகரன் 

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
ttv dinakaran 450.jpg


ஜெயலலிதா கடந்த 2016 தேர்தல் அறிக்கையில் 6,672 மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று தெரிவித்தப்படி ஆட்சிக்கு வந்தபிறகு 500 மதுக்கடைகள் மூட உத்தரவிட்டார். அதைதொடர்ந்து தற்போதைய அரசு கடந்து ஆண்டு பிப்பவரியில் 500 கடைகளை மூடியது. அதற்கு பிறகு நீதிமன்றங்களின் தீர்ப்பின்படி கிட்டதட்ட 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்பொழுது 3,866 கடைகள் உள்ளன என்று அமைச்சர் நேற்று சபையில் தெரிவித்தார். 810 கடைகளை மீண்டும் திறப்பதற்கு காரணம் என்ன? என்று சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
 

அதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, 6,700 என்று இருந்த டாஸ்மாக் கடைகள் இன்று 3,862 கடையாக குறைக்கப்பட்டிருக்கிறது. 2002ஆம் ஆண்டிலிருந்து தமிகத்தில் இதுவரை 25 சதவீதம் மதுபான ஆலை யாருடையது? எந்த குடும்பத்தை சார்ந்தது? ஜெயலலிதா மறைந்த பிறகு அவருடைய கொள்கையை ஏற்று இருந்தால் அவர்கள் இங்கே வந்து கேள்வி கேட்பதற்கு தகுதி உள்ளது. ஆனால் அங்கே வருமானம் வர வேண்டும். இங்கே மக்களுக்கு மத்தியில் வந்து ஜெயலலிதா உடைய அரசுக்கு விரோதமாக இந்த அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுவதா? என்றார். 

 

minister thangamani.jpg


இதனைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 
 

எனக்கு சாராய ஆலை எதுவும் கிடையாது. எனது மனைவி, எனது குழந்தைதான் எனது குடும்பம். வேறு யாரவது உறவினர்கள் வைத்திருந்தால் அந்த ஆலை எல்லாம் எங்கு இருக்கு என்று எனக்கு தெரியாது. 2016ல் ஜெயலலிதா முதல்வரான பிறகு இவர்தானே டாஸ்மாக் மந்திரியாக இருந்தார்? டி.டி.வி. தினகரன் உள்பட ஜெயலலிதாவால் விலக்கப்பட்டவர்கள். ஆகையால் அவர்கள் ஆலையில் இருந்து அரசாங்கத்துக்கு மதுபானங்கள் வாங்க கூடாது என்று சொல்லியிருக்கலாமே? 
 

அண்ணன் தங்கமணி, கட்சியில் ஒதுக்கப்பட்ட, ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்ட டி.டி.வி. தினகரன் துணைபொதுச்செயலாளர் என தேர்தல் ஆணைய்ததில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆர்,கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட்டபோது அண்ணன் தங்கமணி உள்பட இந்த மந்திரிகள் ஆட்டோவில் தொத்திக்கொண்டு வந்தவர்கள். 
 

திடீரென்று இந்த குடும்பம் மது ஆலையை மூடினார்களா என்று கேட்கிறார். என்னிடம் மது ஆலை இருந்தால்தான் நான் மூட முடியும். உறவினர்கள், நண்பர்கள் வைத்திருந்தால் அதுக்கு நான் பொறுப்பாக ஆக முடியுமா? 2011ல் ஜெயலலிதா இவர்கள் பேச்சை கேட்டு கட்சியில் இருந்து எங்களை எடுத்தார்கள். 2016ல் இவர்தானே டாஸ்மாக் மந்திரியாக இருந்தார். அப்ப சொல்ல வேண்டியது தானே? தினகரன் குடும்பத்தை சேர்ந்த தொழிற்சாலையில் இருந்து நாம் சரக்கு வாங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே? அப்புறம் ஏன் வாங்கிகொண்டு இருக்கிறார். 
 

யார் யார் எந்தெந்த தொழிற்சாலையில் பினாமி பெயரில் பாட்னர் வைத்து இருக்கிறார்கள் என்று கோயம்புத்தூர் பக்கம் போய் கேட்டால் தெரியும். எந்த பொய்யும் நிக்காது. எந்த உண்மையும் நிக்காது. உறுப்பினரின் குடும்பம் என்று சொன்னார். சபையில் அரசியல் மேடை போல் பேசிய அமைச்சருக்கு பதில் வேண்டியது கடமை. 

குடும்ப உறுப்பினர் என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பேச அனுமதி தரவில்லை என்றால் அவர் நடுநிலை தவறிவிட்டார் என்று தானே அர்த்தம். 
 

கேள்வி : நேற்று அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கும்போது உங்களை குறிப்பிட்டு பேசினார்.
 

பதில் : யாரு டாஸ்மாக் மணியா?
 

கேள்வி : உங்கள் ஆதரவாளர்கள் போன் போட்டு மிரட்டியதாக சொல்கிறார்களே?
 

பதில் : அண்ணன் தங்கமணி, சும்மா பொய்யா சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்களிடம்தானே காவல்துறை இருக்கிறது. அதை வைத்து கண்டுபிடிக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் எங்கள் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் ஆட்சியாளர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. டாஸ்மாக் அமைச்சரை டாஸ்மாக் அமைச்சர் என்று தான் சொல்ல முடியும். அவர் கோபத்தில் நிதானம் இல்லாமல் பேசுகிறார். அவர் குற்றவுணர்வில் அம்மாவுக்கு தெரியும் கடவுளுக்கு தெரியும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்த தேர்தல் வரும், அதில் எப்படி ஜெயிக்கிறர் என்று பார்ப்போம். என்னை, இவர் ஒரு தனி உறுப்பினர். இவரால் ஆட்சியை பிடிக்கமுடியாது. சரி அப்படியே வைத்துக்கொள்வோம். இந்த தனி உறுப்பினருக்கு ஏன் ஒரு மே தின கூட்டம் நடத்த கூட இந்த காவல் துறை அனுமதிக்கவில்லை. இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.