Skip to main content

‘பணத்திற்கு யார் பொறுப்பு!’ ஒரு வாரமாக சாலை ஓரம் நின்ற லாரிகள்! 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

‘Who is responsible for the money!’ Trucks parked on the side of the road for a week!

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், சத்திரம், வெங்கடாம்பேட்டை, அப்பியம்பேட்டை, பத்திரக்கோட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், குள்ளஞ்சாவடி அடுத்த சத்திரம், பாச்சாரப்பாளையம், கோரணபட்டு, அப்பியம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த  ஒரு வாரத்திற்கு முன்பு அப்பியம்பேட்டை கண்ணன், சத்திரம் காசிராஜன் ஆகியோர் பன்னீர் கரும்புகள் கொள்முதல் செய்தனர். அதில் வெங்கட்டாம்பேட்டை பொன்னுரங்கம், வெற்றிவேல், முத்துக்குமரன், செந்தாமரைக்கண்ணன், பாச்சாரப்பாளையம் பரமசிவம், செஞ்சிவேல், கோரணப்பட்டு கனகராஜ், அப்பியம்பேட்டை கணபதி உள்ளிட்ட 9 விவசாயிகளிடம் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான 14 லாரி பன்னீர் கரும்பை வெட்டி ஏற்றியுள்ளனர். அவைகளுக்கு பணம் கேட்டதற்கு, கரும்பை எடுத்து சென்று விட்டு, பின்னர் வந்து பணம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு கரும்பு விவசாயிகள் 'பணம் கொடுத்த பின்பு, கரும்பு ஏற்றிய லாரி எடுத்துச் செல்லுங்கள்' என சொல்லியுள்ளனர். மாலை பணத்துடன் வருவதாக சென்ற கண்ணன் ஏழு நாட்களாக வரவில்லை.

 

‘Who is responsible for the money!’ Trucks parked on the side of the road for a week!

 

இதனால் ஏற்றிய கரும்பை எங்கு எடுத்துச் செல்வது?, யாரிடம் கொண்டு சேர்ப்பது? என தெரியாமல் ஓட்டுனர்கள் தவித்தனர். இதனால் லாரிகளை சத்திரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்தனர். மேலும் கரும்புக்கு முன்பணம் மட்டும் வாங்கிய விவசாயிகள் வியாபாரிகளிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் லாரி டிரைவர்கள் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் தெரிவித்தனர்.

 

இதுபற்றி தகவலறிந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹீர்,  நெய்வேலி டி.எஸ்.பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் கரும்பு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விஜயதாரணி என்ற பெண் விவசாயிக்கு முழு தொகையும் அளிக்கப்பட்டது. மற்ற விவசாயிகளுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் உரிய தொகை முழுவதும் செலுத்தி விடுவதாக வியாபாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.