Skip to main content

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவின் இந்த பரிதாபநிலைக்கு யார்தான் காரணம்!

Published on 08/09/2019 | Edited on 08/09/2019

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா 867.00 லட்சத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

ஆனா தற்போது ஆசியாவிலேயே 25 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் அருகே செயல்பட்டு வருகின்றது. பூங்காவில் நூற்றுக்கணக்கான வகை வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல் பூங்காவில் ஆங்காங்கே தகவல் பலகைகளில் இடம்பெற்றுள்ளன.

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

வண்ணத்துப்பூச்சி பூங்கா குறித்த பெயர் மற்றும் வகைகள் தகவல் பலகைகளில் உள்ளன ஆனால் வண்ணத்துப்பூச்சி வகை புகைப்படம் வேறாகவும் பெயர் வேறாகவும் இடம்பெற்றுள்ளது . இதனால் வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல்கள் பார்வையாளர்களிடம் கல்வி மாணவர்களிடமும் தவறாக எடுத்துக் கொள்ளப்படும் சரியான தகவல் பலகை வைக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

வண்ணத்து பூச்சி பூங்காவிற்கு தினசரி 200 பார்வையாளர்கள் வந்து செல்கின்றார்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 1000 முதல் 2000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றார்கள். வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு என தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில்தான் போக்குவரத்து வசதி ஏற்படு செய்தனர். மேலூர் வரை தற்போது பேருந்து இயக்கம் இருக்கின்றது. தற்போது சிற்றுந்து மட்டும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வருகின்றது.

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வீடியோ கேமராவிற்கு 1000 புகைப்பட கேமராவிற்கு 500 வசூலிக்கப்படுகிறது. DSLR அல்லாத கேமராவிற்கு 200 வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணம் பார்வையாளர்களுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது தற்போது பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

செயல்படாத உள்ளரங்கம்

ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துபூச்சிகளின் உற்பத்தி பெருக்குவதற்கான நவீன வசதிகள் கொண்ட உள்ளரங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் நவீன தொழில்நுட்ப முறையிலும் இயற்கை முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. உள்ளரங்கில் வண்ணத்து பூச்சிக்காக உணவு தாவரங்களும் மலர் தாவரங்களும் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளரங்கு செயல்படாமல் உள்ளது. உள்ளரங்கு நோக்கமானது பொதுவெளியில் வண்ணத்துப் பூச்சியினை கண்டுகளிப்பது உள்ளங்கையிலேயே அனைத்து வகையான வண்ணத்துப் பூச்சிகளையும் கண்டுகளிக்க வடிவமைக்கப்பட்டது. தற்போது பழுதடைந்துள்ள காரணத்தினால் உள்ளரங்கில் பார்வையாளர்கள் சென்று ஒரே நேரத்தில் வண்ணத்து பூச்சி பூங்காவை பார்வையிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


இயக்கப்படாத பேட்டரி கார் ?

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

25 ஏக்கரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பெரியவர்கள் சுற்றி வரும் வகையில் பேட்டரி கார் விடுவதற்கு திட்டம் இருந்தது. ஆனால் நிதி பற்றாக்குறையினால் திட்டம் கிடப்பில் இருக்கிறது. இதனால் குடும்பத்துடன் வரும் பெரியோர்கள் சரியாக வண்ணத்துப்பூச்சி பூங்காவை சுற்றிப் பார்க்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். விரைவில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்

நிதி நெருக்கடியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா !

தற்போது வாரம் இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகிறது. மின்சாரக்கட்டணம் மாதம் பல லட்சம் வருவதாகவும் கூறுகிறார்கள். இதனால் பெரும் நிதி நெருக்கடியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா இருப்பதால் நுழைவு கட்டணம் முதல் வாகன கட்டணம் வரை உயர்த்தப்பட உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

நீர் பற்றாக் குறையினால் பட்டுப்போகும் மரங்கள்

பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் தாவரங்களான சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்றவையும் பல்வேறு வகையான மலர்ச்செடிகளும் குறுமரங்கள், குறுஞ்செடிகள், புற்கள் போன்றவையும் அது தவிர ஏராளமான மரங்களும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. தற்போது 298 வகையான தாவரங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகமெங்கும் வறட்சியினால் ஆறுகள் வறண்டு கிடக்கும் நிலையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆழ்குழாய் கிணறு மூலமாக நீரை எடுத்து பயன்படுத்திவருகிறார்கள். பொதுவாக நீர் இருக்கும் இடங்களில் வண்ணத்துப் பூச்சிகள் அதிகமாக இருக்கும் தற்போது உணவுத் தாவரங்கள் நீர் பற்றாக் குறையினால் பட்டுப்போய் வருவதால் உணவுத் தாவரங்கள் அழியும் சூழல் ஏற்பட்டு வருகிறது.


 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

பூங்காவில் 38 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆரம்ப நிலையில் இடம் பெற்று இருந்தன. தற்போது 103 வண்ணத்துப் பூச்சி வகைகள் பூங்காவில் வாழ்வதாக குறிப்புகள் சொல்லக் கூடிய நிலையில் பூங்காவை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். 298 வகையான தாவரங்கள் 103 பூச்சி வகைகள் 20 வகை பறவை இனங்கள் இங்கு உள்ளது. ஆசியாவிலேயே திருச்சியை திரும்பிப் பார்க்கும் வகையில் வைத்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சின்னங்களில் ஒன்றாக தமிழ் மறவன் பட்டாம்பூச்சி வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி கூட இங்க இல்லை என்பதுதான் அதிர்ச்சியான விசயம்.
வண்ணத்துபூச்சிக்கு என்று ஸ்பெஷலாக அமைக்கப்பட்ட இந்த பூங்காவிற்கு 25 ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் 10 ஏக்கர் சும்மாதான் கிடக்கிறது. திறமையில்லாத நிர்வாகம் என்கிற ஒரே காரணத்திற்காக ஆசியாவிலே மிகப்பெரிய வண்ணத்துபூச்சி பூங்காவின் இன்றைய நிலை பரிதாபநிலையில் உள்ளது.

 

 Who is responsible for this miserableness of Srirangam Butterfly Park!

 

இந்தநிலையில் புதுக்கோட்டைக்கு ஒரு மீடிங்கிற்கு வந்த வனத்துறை முதன்மை செயலாளர் தீடீர் என ஸ்ரீரங்கம் வண்ணத்துபூச்சி பூங்காவிற்கு விசிட் செய்து இதை மேம்படுத்துவதற்கு 78 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி ராஜ கோபுரமும் ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவும் பேணி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

இந்த நிதியை சரியாக பயன்படுத்தி இந்த பூங்காவின் தரத்தை உயர்த்துவார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.