Skip to main content

திருச்சி காந்தி மார்க்கெட் திறக்க யார் காரணம்?

Published on 06/12/2020 | Edited on 06/12/2020

 

 Who is the reason behind opening Trichy Gandhi Market?

 

முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன் ஆரம்பித்துள்ள மனிதவளச் சங்கத்தில் மூத்த உறுப்பினரும், அச்சங்கத்தின் செயலாளருமான கிருஷ்ணமூா்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், கடந்த 18.08.2020 அன்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

 

திருச்சி காந்தி மார்க்கெட், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் நகரப் பகுதிக்குள் காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகளால், பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதோடு, தீ விபத்துகள் ஏற்பட்டால் அதனைக் கட்டுபடுத்த முடியாத அளவில், மிகவும் நெருக்கமான பாதைகளை உடையதாகவும் உள்ளது. அதோடு, தினமும் இங்கு 10 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன் வைத்து இந்த வழக்கானது தொடரப்பட்டுள்ளது.

 

அதற்கு முன்னதாகவே (26.03.2020) அன்று காந்தி மார்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்க வரும் பொதுமக்கள், சில்லரை வணிகர்கள் என பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், திருச்சி மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மார்கெட்டை மூடியது.

 

கரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காந்தி மார்கெட் திறக்கப்படாமல் இருந்தது. அதற்குக் காரணம் கிருஷ்ணமூா்த்தி என்பவர் தொடங்கிய வழக்கு தான். அவரது வழக்கை காரணம் காட்டி அதிகாரிகளும் அதனைத் திறக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், வியாபாரிகள் தரப்பில் காந்தி மார்கெட்டை யார் திறப்பது என்ற போட்டி ஏற்பட்டது.

 

 Who is the reason behind opening Trichy Gandhi Market?

 

இந்தப் போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் சார்பில் சுற்றுளாத்துறை அமைச்சா் வெள்ளமண்டி நடராஜனிடம் மனு கொடுக்கப்பட்டு காந்தி மார்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டங்களை அறிவித்ததோடு வியாபாரிகளிடம் இருந்து பணம் வசூலித்து மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் கிருஷ்ணமூா்த்தி தொடங்கிய வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்தனர்.

 

மேலும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாபாரிகள் நடத்திய போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு செலுத்தினார். அதன்பின் சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்து, இந்த வழக்குக் குறித்து சாதகமான தீா்ப்பு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தான் முடிந்த உதவியைச் செய்கிறேன் என்று கூறிய அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேசி, தற்காலிகமாக காந்தி மார்கெட்டை மூடுவதற்குப் போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இதற்கிடையில் கடந்த 26.11.2020 அன்று விசாரணைக்கு வந்த காந்திமார்க்கெட் வழக்கில், தங்களுக்குச் சாதகமாகத் தீா்ப்பு வராது என்று முடிவு செய்து அறிஞர் அண்ணா மொத்தம் (ம) சில்லரை வணிகர்கள் நலச்சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஒரே நாளில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல், உயர்நீதிமன்றத்தில் சரியான தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

 Who is the reason behind opening Trichy Gandhi Market?

 

ஆனால், மதுரை உயா்நீதிமன்றக் கிளை, இரண்டு பேர் கொண்ட அமர்வில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகிய இருவரும், காந்தி மார்க்கெட் தொடர்பாக விதிக்கப்பட்ட இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டதோடு, காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாகத் திறக்க அனுமதி வழங்கினர். மேலும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில் தற்போதுள்ள வசதி மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்து, அரசுத் தரப்பிலும், வியாபாரிகள் சங்கம் சார்பிலும் பதில் மனு, தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை டிச. 1-க்கு  நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

காந்தி மார்க்கெட் திறப்பதற்குக் காரணமாக இருந்ததாக 26.11.2020 அன்று மாலையே காந்தி மார்கெட் திறப்பில் கலந்துகொள்ள வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டிக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் கோவிந்தராஜலு, அமைச்சர் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது என்று கூறி அவரை தூக்கிவைத்துக் கொண்டாடினார். அதோடு வியாபாரிகள் எப்போதும் உங்களுடைய பக்கம் இருப்போம் என்று அமைச்சருக்கு உறுதியளித்தார்.

 

cnc


01.12.2020 காலை திருச்சி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து மார்கெட் திறக்க நீங்களும் உதவி இருக்கீங்க என்று சொல்லி அவருக்கு மாலை அணிவித்துப் பேசியபோது, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவா்கள் யாரை கை காட்டினாலும் அவா்கள் தான் இந்த கிழக்குத் தொகுதியின் அமைச்சர். எனவே, வியாபாரிகள் எப்போதும் உங்களுடைய பக்கம் இருக்கிறோம் என்றார்.

 

மேலும், நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் ஆவீர்கள் என்று சொல்லி வாழ்த்தினார். இந்த வியாபாரிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தச் சங்கங்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்றொரு பக்கம் காந்தி மார்கெட்டை திறக்க யார் காரணமாக இருந்தார்கள் என்பது மற்றொரு கேள்விகுறியாக உள்ளது. இது வியாபாரிகளுக்கே புரியாத புதிராக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.