Skip to main content

சாண்டா கிளாஸ் வேடத்தில் வந்து ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் யார்? பரபரப்பு தகவல்கள் அம்பலம்!

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Who is the mysterious man who disguised himself as Santa Claus and robbed a retired teacher of his jewels? Exciting information revealed!

                                                                         கோப்புப்படம் 

 

சேலத்தில் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து, ஓய்வு பெற்ற பெண் ஆசிரியரிடம் வீடு புகுந்து நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சேலம் அஸ்தம்பட்டி டிவிஎஸ் காலனியைச் சேர்ந்தவர் பொன்ராணி (69). ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். இவர் டிச. 5ம் தேதி இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பொன்ராணி மகிழச்சியுடன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

 

வீட்டுக்குள் சென்றதும் அந்த மர்ம நபர் பொன்ராணிக்கு ஒரு சாக்லெட்டை எடுத்துக் கொடுத்தார். உங்களுடன் வேறு யாரும் வரவில்லையா? பாதிரியார்கள் யாராவது வருகிறார்களா? என பொன்ராணி விசாரித்தபடியே அந்த சாக்லெட் மீது இருந்த காகித உறையைப் பிரித்துக் கொண்டிருந்தார். அப்போது சாண்டா கிளாஸ் வேடமணிந்த மர்ம நபர், திடீரென்று பொன்ராணியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

 

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொன்ராணி, வீட்டை விட்டு வெளியே ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடத்திலும், மர்ம நபர் தப்பி ஓடிய சாலையிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பொன்ராணியிடம் இருந்து நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய சாண்டா கிளாஸ் வேடத்தில் இருந்த மர்ம நபர் ஒரு பெண் என்பது தெரிய வந்தது.

 

மேலும், சம்பவத்தின் போது பொன்ராணியின் வீட்டுக்கு வந்த அந்த மர்மப்பெண், அவரிடம் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். இதிலிருந்து அந்தப் பெண், அவருக்கு நன்கு தெரிந்தவராக இருக்கலாம் என்றும், வாய் திறந்து பேசியிருந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதால் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

 

சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த பெண்ணின் உருவத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், சாண்டா கிளாஸ் உடைகள் விற்கும் கடைகளிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல்துறை. சமீபத்தில் கடைகளில் சாண்டா கிளாஸ் உடையை வாங்கிச் சென்றவர்களின் விவரங்களையும் காவல்துறையினர் திரட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.