Skip to main content

செந்தில்பாலாஜிக்கு எதிராக நிற்கும் அந்த அதிஷ்டசாலி யார் !

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

கரூர் மாவட்டத்தில் உள்ளடக்கிய அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பெரிய பரப்பளவு கொண்ட தொகுதி. அரவக்குறிச்சி வட்டம், மண்மங்கலம் வட்டத்தின் சில பகுதிகள், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்கள், தாந்தோணி ஒன்றியத்தின் சில பகுதிகள், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, புஞ்சைபுகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, காகிதபுரம் ஆகிய 5 பேரூராட்சிகளை உள்ளடக்கியது. 

 

 

இந்த தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள், தலித் நாயக்கர்கள், இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட தொகுதி. இந்த தொகுதியில் திமுக, அதிமுக தலா 4 முறை, காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரா கட்சிகள் தலா 1 முறை வெற்றிப்பெற்றுள்ளன.

 

 Who is the lucky opponent of Senthilbalaji?

 

இங்கே கடந்த 10 ஆண்டுகள் கரூர் அதிமுகவை கட்டிக்காத்த செந்தில்பாலாஜி அரசியல் கால சக்கரத்தில் தினகரன் அணியுடன் இணைந்து கடைசியில் திமுகவில் இணைத்து தற்போது கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஆகி இருக்கிறார். 

 

கடந்த அரவக்குறிச்சி தேர்தலி பணம் கொடுக்கப்பட்டதாக நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப்பெற்ற செந்தில்பாலாஜி தான் தற்போது திமுக சார்பில் வேட்பாளர். 

 

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவை தன் வசப்படுத்தி வைத்திருந்த செந்தில்பாலாஜிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்பது தான் தற்போது அதிமுகவில் பெரிய கேள்வியாகவும் குழப்பமாகவும் உள்ளது. 

 

 Who is the lucky opponent of Senthilbalaji?

 

செந்தில்பாலாஜிக்கு முன்பு இங்கே அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாநில பாசறை செயலாளர் செந்தில்நாதன் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஏற்கனவே அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்தவர். தன்னுடைய தோல்விக்கும் காரணம் செந்தில்பாலாஜி என்று நினைத்து தற்போது வரை செந்தில்பாலாஜிக்கு எதிரும் புதிருமாக இருப்பவர் இந்த செந்தில்நாதன். இவர் தற்போது துணை சபாநாயகர் தம்பித்துரையின் அரவணைப்பில் இருப்பதால் இவர் அரவக்குறிச்சி சீட்டு தனக்கு வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்.

 

 Who is the lucky opponent of Senthilbalaji?

 

இதற்கு இடையில் ஜெ. உயிருடன் இருக்கும் போது மாவட்ட செயலாளர் பதவி, மற்றும் அமைச்சர் பதவியிலிந்து நீக்கப்பட்ட போது அவருக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான அமைச்சர் விஜயாஸ்கர் தன்னுடைய தம்பி சேகரை செந்தில்பாலாஜிக்கு எதிராக நிறுத்த தம்பித்துரைக்கு தெரியாமல் முதல்வர் எடப்பாடி வரை சென்று சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் சுமார் 60 ஆயிரம் ஓட்டுகள் முஸ்லிம்களுடையது தான். இதனால் அதிகம் உள்ள சிறுபான்மைமையினர் முஸ்லீம் வேட்பாளர் நிறுத்தினால் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என்று உளவுத்துறை கட்சியின் மேலிடத்திற்கு தகவல் கொடுத்திருப்பதால் பல்வேறு குழப்பங்களில் அதிமுக தலைமை இருக்கிறது. 

 

 

தற்போது வரை செந்தில்பாலாஜியை எதிர்த்து நிற்க்கப்போகும் அந்த அதிஷ்டசாலி யார் என்கிற பேச்சே கரூரை பொறுத்தவரையில் பரபரப்பாக உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.