Skip to main content

மயக்க பிஸ்கட் கொடுத்து 114 ஆடுகளை கடத்திய கடத்தல் மன்னன்!

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் 114 ஆடுகளை திருடியதாக திருடன் மயக்க பிஸ்கட் கொடுத்து கடத்தல் சம்பம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சுமார் 300 வீடுகள் உள்ளன இந்நிலையில் அதிகாலை நேரங்களில் தொடர்ச்சியாக ஆடுகள் காணமல் போயிக்கொண்டே இருந்தன.

 

   who kidnapped 114 goats using Anesthetic biscuits

 

இந்த நிலையில் திடீர் என அதிகாலை நேரத்தில் 4 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை இருமர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் திருட முயன்றனர். அப்போது ஆடு கத்தியதால் அப்பகுதியினர் விழித்துக்கொள்ள திருட வந்த இடத்தில் நண்பனை கழட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆசாமி தப்பிவிட மற்றொருவன் பொதுமக்களிடம் சிக்கி விட்டான்.

 

 

அவனைப் பொதுமக்கள் பிடித்து கைகளை கட்டிப்போட்டு நையப்புடைத்தனர். இதனிடையே சீருடை அணியாத இரு காவலர்கள் அவனை அடிக்காதீர்கள் என தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் மரக்கடை சேர்ந்த சேட்டு என்றும் அவன் பிரபல வீடு புகுந்து திருட்டு கொள்ளையன் என்பதும். திருச்சி பெரிய செட்டி தெரு கோவிந்தன் மகன் பிரபு என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவன் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

இந்த பகுதியில் இதுவரை 114 ஆடுகள் களவு போயுள்ளதாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆடு திருவதற்கு இவர்கள் புது மாதிரியான டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆடுகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கடத்தினால் எந்த பிரச்சனையும் வராது என்று மயக்க பிஸ்கெட் கொடுத்து கடத்துவதை வழக்கமா வைத்திருக்கிறார்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளிவந்த குற்றவாளி இவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.