Skip to main content

ஜெ. அண்ணன் மகள் ஜெ.தீபான்னு இருக்காங்களா?! எனக்கு தெரியாதுங்க? -தம்பிதுரை பதில் 

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
j.deepa - thambidurai


தீபா யார், அவர் யார் என்றே தெரியாது என கிண்டல் செய்தார். உடனே பின்னால் இருந்த கட்சிகாரர்கள் சிரித்துக்கொண்டே ஜெ.வின் அண்ணன் மகள் என்று சொன்னவும் அப்படி யாரும் இருக்காங்களா? என்று அப்பாவியாக கேட்டுக்கொண்டே அப்டியா எனக்கு அது தெரியாதுங்க என்று சொல்லி எல்லோரையும் அசர வைத்தார் தம்பிதுரை. 

 

 

 

கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது:-
 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மக்களுக்காகதான் செயல்படுகிறது. ஜெ. முதல்வராக இருக்கும் போதே எய்ம்ஸ் இடங்கள் தேர்வு செய்து அனுப்பினோம். ஆனால் மத்திய அரசு தான் தாமதமாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவல் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பொன்ராதாகிருஷ்ணன் அதை தடுக்க ஏதோனும் முயற்சி செய்துள்ளாரா? இவை அனைத்தும் அரசை குறை கூற வேண்டும் என்கிற நோக்கில் சொல்லும் பொய்யான குற்றசாட்டு ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும். 
 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் பிஜேபி. இதுவரை எத்தனை ஊழல் குற்றசாட்டுகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. 2ஜி வழக்கில் இதுவரை மேல்முறையீடு செய்ய மெத்தனம் காட்டுகிறது. மத்திய அரசிடம் இருந்து 20 இலட்சம் கோடி ரூபாய் நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே தேசம், ஒரே மொழி, ஓரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்ளை ஏற்புடையது அல்ல. 
 

 

 

லோகாயுத்தா சட்டத்தை முறையாக அமுல்படுத்தாதை ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டபோது, எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்யும் கட்சியாக திமுக உள்ளது. அவர்களுக்கு என்ன தெரியும்.
 

பேட்டியின் போது... இரட்டைஇலையை மீட்பேன் என்று ஜெ.தீபா சொல்லியிருக்காரே என்ற கேள்வி கேட்டவுடன்… தீபா யார், அவர் யார் என்றே தெரியாது என கிண்டல் செய்தார். உடனே பின்னால் இருந்த கட்சிகாரர்கள் சிரித்துக்கொண்டே ஜெ.வின் அண்ணன் மகள் என்று சொன்னவும் அப்படி யாரும் இருக்காங்களா? என்று அப்பாவியாக கேட்டுக்கொண்டே அப்டியா எனக்கு அது தெரியாதுங்க என்று சொல்லி எல்லோரையும் அசர வைத்தார். 
 

பொதுப்பயன்பாட்டிற்கு சாலைகள் தேவை. கரூர் - கோவை 4 - வழி சாலை அமைக்க கடந்த 3 - ஆண்டுகளாக போராடி தற்போது செயல்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். சாலை வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்ச்சிகள் மேற்கொள்வேன். தேவையில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுவேன். 
 

முன்னதாக புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சங்க காலத்தில் ஜாதி, மதம் கிடையாது. சமஸ்கிருத கலாச்சாரம் வந்த போது, ஜாதி, மதம் உருவானது. சேர, சோழ, பாண்டியன் ஆட்சி காலத்தில் தமிழ் வளர்ந்தது. சைவம் தமிழை வளர்த்தது. பிரதமர் நரேந்திர மோடி, புதிய கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது, ராஜராஜ சோழன் பெயரை வைத்தார்.
 

இத்ததைய வரலாறுகளை புத்தகங்கள் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். கலாச்சாரம், இனப்பற்று வளர தாய் மொழிப் பற்று அவசியம். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கணக்கில்லாத புத்தகங்களை படித்தவர். அவரது படிப்பாற்றல்தான், தமிழகத்தில், 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி நீடிக்கிறது. நம்மை செதுக்கிக் கொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊழலை ஒழிப்பதே அதிமுகவின் நோக்கம்..” - எம்.பி. தம்பிதுரை 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

"The aim of ADMK is to eliminate corruption." - MP Thambidurai
கோப்புப் படம்

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு செய்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், பூத் கமிட்டி  திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான தம்பிதுரை கலந்துகொண்டு பூத் கமிட்டி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய தம்பிதுரை, “தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் வேறு மற்ற நடிகர்கள் வேறு. நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று காணாமல் போய் உள்ளனர் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

திமுகவில் கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் இன்று காணாமல் போய்விட்டது. திமுக என்ற கட்சியும் விரைவில் காணாமல் போகும். அதிமுகவின் நோக்கம் தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஒழிப்பது மட்டுமே” என்றார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

“மோடிக்கு குடும்பம் இல்லை... செங்கோட்டை தான் வீடு” - கார்கேவுக்கு தம்பிதுரை பதில் 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “என்னுடைய இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் 10வது முறையாக உரையாற்றுகிறேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை அடுத்த ஆண்டு மீண்டும் இதே இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் பட்டியலிடுவேன்” என்று தெரிவித்தார். 

 

இதற்கு  காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் உள்ளது. மீண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று பிரதமர் கூறுவது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அவர் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்பவரால் நாட்டை எப்படி கட்டி எழுப்ப முடியும். அடுத்த ஆண்டு அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், அதை அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்தார்.

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, “பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தான் தேசியக் கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரியாகத்தான் சொல்லியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.