Skip to main content

அரசு பள்ளி வளாகத்தின் வழியாக சட்டவிரோதமாக பிவிசி குழாய் பதிக்கும் வட்டாச்சியர்!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளது ஆதவப்பாக்கம் கிராமம் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் உத்திரமேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி பின்பு பதவி உயர்வு பெற்று தற்சமயம் காஞ்சிபுரம் மாவட்ட ஆசியர் வளாகத்திலுள்ள நில அளவீடு தாசில்தாராக பணியாற்றிவருகிரார்.

 

who illegally infects PVC pipeline through the state school premises dhasildar


ஆதவப்பாக்கம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியின் பின்புறம் இந்த வட்டாட்சியருக்கு சொந்தமான விளை நிலம் உள்ளது. இந்தநிலையில் ராஜம்மாள் அந்தநிலத்திற்கு அங்குள்ள செய்யாற்றிலிருந்து, சட்டவிரோதமாக ஆழ்துளை அமைத்து, ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக ஆயில் மோட்டார் மூலம் , பள்ளி விளையாட்டு திடல் வழியே பிவிசி குழாய் பதித்து தண்ணீர் திருட திட்டமிட்டு, அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் சவிதா மற்றும் கிராம உதவியாளர் ராமன் ஆகியோர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளி வளாகம் வழியே பள்ளம் தோண்டி குழாய் பதித்துள்ளனர். அதில் அந்த கிராமத்து முக்கிய தார்ச்சாலை, மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் நடுவில் பள்ளம் தோண்டி இரவோடு இரவாக குழாய் பதித்துள்ளனர்.

 

who illegally infects PVC pipeline through the state school premises dhasildar


பள்ளிக்கு சுற்றுசுவரோ அல்லது வேறு விரிவாக்க கட்டுமான பணிகளோ மேற்கொள்ளும்போது இது மிகவும் இடையூறாக இருக்கும் என்றும், வட்டாச்சியர் என்ற துணிவில் அதிகாரிகளின் துணையோடு இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்ட வட்டாச்சியர் ராஜம்மாள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக பேசினாலோ, புகார் அளித்தாலோ தாசில்தார் ராஜம்மாள் மிரட்டி வருகிறார். அதேபோல அதை படம் பிடித்த செய்தியாளர் தாசில்தாரின் மகனால் மிரட்டப்பட்டு அவர் எடுத்த போட்டோவும் டெலிட் செய்து மிரட்டி அனுப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. மேலும் தாசில்தார் ராஜம்மாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு நெருக்கமானவர் என்ற போர்வையில் தான் நினைத்ததை சாதிப்பவர் என்ற பெயரும் உண்டு.

 

who illegally infects PVC pipeline through the state school premises dhasildar


இது தொடர்பாக தாசில்தார் ராஜமாளிடம் பேசினோம் " ஆமாங்க என்னோட மகன் தான் பைப் பதிச்சிட்டான், நான் வேண்டானு சொன்னேன் அவன் கேட்கவில்லை, செய்தியெல்லாம் வேண்டாம் நேர்ல வாங்க உங்கள கவனிச்சுகிறேன், என்ன பன்னனூம்னு சொல்லுங்க பார்த்துகலாம்.... என அசால்ட்டாக பேசிகிட்டே போனை கட் செய்தார் அவர். சட்டவிரோத செயலை செய்தது மட்டுமில்லை, நம்மிடமே பேரம் பேசினார் தாசில்தார், சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய இவர்களே சட்டவிரோத செயல்லி ஈடுபட்டால் யார் கேட்பது ...? 

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சவிதாவிடம்  பேசினோம், பதில் பேச மறுத்துவிட்டார். சம்பவம் தொடர்பாக மாவட்டாச்சியர் பொன்னையாவை தொடர்பு கொண்டோம் அவர் தொடர்பில் வரவில்லை.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

'மீண்டும் வேகமெடுக்கும் பரந்தூர் போராட்டம்'- போலீசார் குவிப்பால் பரபரப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
'Paranthoor struggle to pick up speed again'-Police build up excitement

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக் குழுவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னைக்கான இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்ட அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அலுவலகம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டு நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலம் எடுக்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர்களில் படையெடுக்க ஆயத்தமான நிலையில், திடீரென சிலர் சாலையிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.