Skip to main content

திண்டுக்கல் மாநகர பெண் மேயர் ரேஸ்சில் முந்துவது யார்?

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

dfh


தி.மு.க வரலாற்றிலேயே திண்டுக்கல் மாநகராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளை ஆளுங்கட்சி கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. அந்த அளவுக்கு நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் திண்டுக்கல் மாநகராட் சியி ல் உள்ள நாற்பத்தி எட்டு வார்டுகளில் 30 வார்டுகளை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது. அதுபோல் கூட்டணிக் கட்சிகளும் 7 தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் திமுக கூட்டணி 37 வார்டுகளில் வெற்றி பெற்றது அதேபோல் வெற்றி பெற்ற 5 சுயேச்சைகளும் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து ஐ.பி.முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர். அதன்மூலம் 42 வார்டுகளை ஆளுங்கட்சி தக்க வைத்திருக்கிறது. மீதமுள்ள 6 வார்டுகளில் 5 வார்டுகளை எதிர்க்கட்சியான அதிமுகவும் ஒரு வார்டை பி.ஜே.பி.யும் கைப்பற்றியுள்ளது.

 

அந்த அளவுக்கு அதிக பெரும்பான்மையான பலத்துடன் திமுக கூட்டணி இருக்கிறது. அதுலேயும் பெரும்பான்மையான வார்டுகளில் அதிமுக டெபாசிட் பறிபோய் இருந்ததையும் பார்க்க முடிந்தது. ஆனால் இந்த  மாநகராட்சியை பெண் மேயருக்கு ஒதுக்கி இருப்பதால் திமுக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற 20 பெண் கவுன்சிலர்களில் 6-வது வார்டு சரண்யா, 3-வது வார்டு இந்திராணி, 9-வது வார்டு சாந்தி, 30-வது வார்டு, லட்சுமி,19-வது வார்டு ஆரோக்கிய செல்வி, 43-வது வார்டு விஜயா, 37-வது வார்டு நித்தியா, 20-வது வார்டு ஜெயந்தி, 5-வது வார்டு சுவாதி, 23-வது வார்டு இளமதி உள்பட 10 பெண் கவுன்சிலர்கள் மேயர் பதவிக்கு போட்டி போட்டு வருகிறார்கள். ஏற்கனவே கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சிக்காக உழைத்தவர்கள் தான் பதவிகளும் கொடுக் கப்படும் என்று கூறியிருந்தார்.

 

அதைத்தொடர்ந்து கட்சிக்காக உழைத்தவர்களும் போட்டி போட்டு வருகிறார்கள். அதோடு சில கவுன்சிலர்கள் பண பலத்துடனும் மோதி வருகிறார்கள் இருந்தாலும் அமைச்சர் ஐ.பெரியசாமி யாருக்கு வரம் கொடுக்கிறாரோ? அவர்தான் முதல் பெண் மேயராக வரமுடியும். அதனால சில பெண் கவுன்சிலர்களின் கணவர்களும் உறவினர்களும் பண பலத்துடன் மேல்மட்டம் வரை மோதி அமைச்சர் ஐ.பி. ஆசியைப் பெற நினைக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆறாவது வார்டு வெற்றி பெற்ற சரண்யாவின் மாமனார் சந்திரசேகர் ஏற்கனவே யூனியன் சேர்மனாக இருந்தவர். கடந்த எம்.பி. எம்எல்ஏ தேர்தலின் போது சீட் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை, அதன்பின் மேயர் தேர்தலில் யாவது சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

 

ஆனால் பெண் மேயர் என்பதால் தனது மருமகளை களத்தில் இறங்கி வெற்றி பெற வைத்தவர், பெண் மேயர் பதவி பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். அது போல் முன்னாள் யூனியன் சேர்மன் பெருமாள் சாமியும் தனது மனைவி சாந்திக்கு மேயர் பதவி போட்டி போட்டு வருகிறார். அதுபோல் 3-வது வார்டு வெற்றி பெற்ற இந்திராணிக்கு தலைமை வரை செல்வாக்கு இருப்பதாகவும் தெரிகிறது. அதுபோல் லட்சுமி, நித்தியா, ஜெயந்தி, ஆரோக்கிய செல்வியின் உறவினர்களும் சீட்டுக்காக மோதி வருகிறார்கள். அதன் அடிப்படையில்  பார்க்கும் போது  கடும் போட்டிகளுக்கு இடையே சரண்யா அல்லது இந்திராணி ஆகிய இருவரில் ஒருவர் மேயர் சீட்டில் உட்கார வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் அமைச்சர் பெரியசாமியின் கண்பார்வை யார் பக்கம் திரும்புதோ அந்த பெண் கவுன்சிலர் தான் மேயர் சிம்மாசனத்தையும் அலங்கரிக்க முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது