Skip to main content

போலி விதைகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிய வியாபாரிகள்; கண்டுகொள்ளாத அரசாங்கம்!!

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சம்பாபயிர்கள், குறைந்த காலத்திலேயே  கதிர்கள் வந்ததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கலந்த ஏமாற்றத்திற்கு ஆளகியுள்ளனர். விதையை மாற்றிக் கொடுத்து ஏமாற்றியதே காணரம் என்று இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சம்பா சாகுபடி பணிகள் மற்றும் தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் நன்னிலம், மற்றும் பெரும்புகளூர் கிராமங்களில் விவசாயிகள் விட்ட சம்பா  நாற்றுகள் நடவுக்கும் முன்பே கதிர் வந்ததால்  விவசாயிகள்  அதிர்ச்சியும் வேதனையும்  அடைந்துள்ளனர்.

 

fake seed

 

இதுகுறித்து பெரும்புகளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து  உரிய நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும்  அந்த மனுவில்  பெரும்புகளூர் கிராமத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள்  வண்டாம்பாளை என்ற இடத்தில்  உள்ள கமலாம்பிகை என்ற கடையில்  நீண்ட நாள்  பயிரான  சிஆர் 1009  என்ற விதை ரகத்தை  வாங்கி  180 ஏக்கர் பரப்பளவு சாகுபடி மேற்கொள்ள நாற்றுவிட்டு விட்டுள்ளனர். 

 

ஆனால் நடவு பணிகள் மேற்கொள்ளவதற்கு முன்பாகவே  கதிர் வந்துவிட்டதால் பல லட்சம் ரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தரமற்ற விதைகளை வழங்கிய கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு இழப்பினை பெற்றுத்தர வேண்டும் "என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்

.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் மனுவை வழங்கிவிட்டு தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர். 

 

 

இதுகுறித்து விவசாய சங்க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்". ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் கானல் நீராகி போய்விட்டது. காவிரியில் தண்ணீர் இல்லாமலும் போதுமான பருவமழை இல்லாமல் விவசாயம் முழுமையாக அழிந்து, உணவின்றியும் கால்நடைகளுக்கு உணவு இல்லாமலும் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் இந்த ஆண்டுகிடைத்த தண்ணீரை நம்பி நாற்றுவிட்டிருந்த விவசாயிகளுக்கு விதைகள் மூலம் அழிவுவந்துள்ளது, விதைகள் தரமானதா, முளைக்கும் திறன்கொண்டதா, இந்த பருவத்திற்கு ஏற்ற ரகமா, தரமான விதை உற்பத்திசெய்கிறார்களா, விற்பனை செய்யும் வியாபாரிகள் அனுபவமானவர்களா, என கண்காணிக்கவேண்டிய வேளாண்மை அதிகாரிகள் கையூட்டு வாங்கிக்கொண்டு விற்கசொல்கின்றனர், விற்பவர்களுக்கு என்ன ரகம் என்பதுகூட தெரியாமல் பணத்திற்காக விற்பனை செய்துவிடுகின்றனர். அதன் விளைவுதான் இந்த சம்பவம், அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதைகளை விற்பதையும் குறைத்துக்கொண்டு தனியாரை ஊக்கப்படுத்துவதால் வந்த வினைதான் இது, இதற்கு முழுபொறுப்பு மாவட்ட வேளாண் இணை ஆணையரும், விதையில் கையொப்பம் போட்டுள்ள அதிகாரியுமே பொறுப்பு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கின்றனர்.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.