Skip to main content

ஆரணி நகரை ஆளப்போகும் சேர்மன் யார்?  

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

Who is the chairman of Arani

 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நான்கு நகராட்சிகளில் இரண்டாவது பெரிய நகராட்சி ஆரணி. வருவாய் ரீதியில் மிக முக்கிய நகராட்சி. ஆரணி பட்டுப்புடவை தமிழகத்தில் பிரபலமானது. அதேபோல் கேரளா, கர்நாடகாவில் ஆரணி பட்டுத்தான் கோலோச்சுகிறது.

 

ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆளும்கட்சியான திமுகவிடம் 12 கவுன்சிலர்களும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் 2 கவுன்சிலர்களும், மதிமுகவிடம் 2 கவுன்சிலர்கள், விசிகவிடம் ஒரு கவுன்சிலர் என 17 கவுன்சிலர்கள் இந்த தரப்பிடம் உள்ளனர். அதிமுகவிடம் 15 கவுன்சிலர்களும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் என உள்ளனர். ஆளும்கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக இரண்டும் சமபலத்துடன் இருப்பதால் சேர்மன் பதவியை மறைமுக தேர்தலில் பிடித்து பட்டு நகரை ஆளப்போவது யார் என்கிற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. ஆரணி நகராட்சியின் சேர்மன் பதவி பொது பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் முடிவு செய்தால் ஆண் – பெண் யார் வேண்டுமானாலும் சேர்மன் பதவியில் அமரலாம்.

 

Who is the chairman of Arani

 

ஆளும் கட்சியான திமுக தரப்பில் திமுக நகரச் செயலாளர் ஏ.சி.மணி, நகரமன்றத் தலைவராக ஆசைப்படுகிறார். தேர்தல் நேரத்தில் தங்களது கட்சி, கூட்டணி கட்சியென ஒவ்வொரு கவுன்சிலர் வேட்பாளருக்கும் 7 முதல் 10 லட்சம் வரை செலவுக்காக தந்தார். இதனால் இவரே சேர்மன் வேட்பாளர் என்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் மகன் பாபு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். சேர்மன் பதவிக்கு முயற்சித்தவர், தற்போது வைஸ்.சேர்மன் பதவியை பிடிக்க முயற்சிக்கிறார். ஆரணி நகராட்சியில் கோஷ்டிபூசலால் 15 வார்டுகளை அதிமுகவிடம் தோற்றுப்போய் நிற்கிறது திமுக.

 

அதிமுகவில், மாவட்ட பால்கூட்டுறவு சேர்மன் பாரி.பாபு, நகராட்சி தலைவர் பதவியில் அமரவேண்டும் என்பதற்காகவே கவுன்சிலர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். திமுகவை விட அதிக அளவு கவுன்சிலர்கள் இருப்பதால் ஆளும் கட்சியோடு மோதி பார்க்கலாம் என ஆலோசித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்.எல்.ஏவுமான சேவூர்.ராமச்சந்திரன் பின்வாங்கிவிட்டார். இரட்டை இலை சின்னத்தில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள தன்தம்பி ஏ.சி.பாபுவை வைஸ் சேர்மனாக்கவதாக இருந்தால் நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என புதியநீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் திமுக, அதிமுக என இரண்டு தரப்பு நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார். திமுக நிர்வாகிகளுடன் தினமும் பேசிவருகிறார் ஏ.சி.பாபு.

 

பெரியளவில் திமுக தரப்பில் கவுன்சிலர்களுக்கான பலமில்லை என்றாலும், 15 கவுன்சிலர்கள் வைத்துள்ள அதிமுக வீக்காக இருப்பதால் திமுக தெம்பாக உள்ளது. அதிமுகவில் தனிப்பட்ட செல்வாக்கில், லட்சங்களில் செலவு செய்து வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் 5 பேர் திமுக ஆதரவு நிலையெடுக்க தயாராகவுள்ளார்கள்.

 

ஆரணியில் அரசியல் சடுகுடு திமுக – அதிமுக இடையே தொடங்கியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.