Skip to main content

திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? யார்?

Published on 21/01/2020 | Edited on 22/01/2020

தமிழகத்தில் சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அதிகம் இடங்களை கைப்பற்றிய நிலையில் திருச்சி மாவட்டம் ஒட்டுமொத்தமாக 14 ஒன்றியங்களையும் திமுக வசமாகியுள்ளது. வெற்றிபெற்றவர்களை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அழைத்து சென்று ஆசீர்பெற்றனர்.

 

 Who are the new District Secretaries in DMK?


இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் 30 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக இருந்தவர். திமுகவின் பல்வேறு மாநில மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் என நடத்தினர். கூட்டணி கட்சியினர் இடையே பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர். திமுகவில் சீனியர் அமைச்சராக வலம் வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தற்போது கட்சியில் மாநில பொறுப்பு கொடுக்க போவதாக கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும நிலையில். இன்று சென்னையில் அவசரமான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து பாராட்டுவிழா மற்றும் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுது.

 Who are the new District Secretaries in DMK?


அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுபெற்றுள்ளது. இது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் வடக்கு மாவட்டத்திற்கு தியாகராஜனும், தெற்கு மாவட்டத்திற்கு கே.என். நேரு இருந்து வருகிறனர். தற்போது கே.என்.நேருவுக்கு தலைமை கழகத்தில் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட உள்ளதால் அந்த இடத்தை திருச்சி மாநகர செயலாளர் முன்னாள் துணைமேயர் அன்பழகனுக்கு கொடுக்க வேண்டும் என்று கே.என்.நேரு சிபாரிச செய்திருக்கிறார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஒப்புதல் கொடுத்து விட்டார்.

 

 Who are the new District Secretaries in DMK?

 

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ் திருவரம்பூர் தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனா நிலையில் தானும் மா.செ.வாக பதவி வேண்டும் என்று கோரிக்கை திமுக தலைவர் மகன் உதயநிதி மூலம் வைக்க. தற்போது அன்பில் மகேசின் கோரிக்கையும் ஏற்கப்பட்டு திருச்சி மாவட்ட திமுக 3 மாவட்டமாக பிரிக்கப்பட உள்ளது.
 

 Who are the new District Secretaries in DMK?

 

திருச்சியில் புதிய மா.செயலாளர்களாக வழக்கறிஞர் பாஸ்கர், காடுவெட்டி தியாகரன், அன்பில் மகேஷ் ஆகியார் தயார் ஆகி வருகிறார்கள்.!
          

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.