Skip to main content

சுழன்றடித்து கிளம்பிய காற்று; தலைதெறிக்க ஓடிய மீனவர்கள்!

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

Whirling wind; Fishermen who ran for their lives!

 

கோடிக்கரையில் இன்று காலையில் கடலின் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு சுழல்காற்றாக வீசியதால் மீனவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர்.

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடிக்கரை கடலில் தீடீரென நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் பலத்த சுழல்காற்று வீசியது. இந்த சுழல்காற்று கடலில் இருந்து பூதம்போல கிளம்பி தரையை நோக்கி சுழண்டடித்தபடியே வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கிவைத்திருந்த வலைகட்டு, பெட்கள் என அங்கிருந்த பொருட்களை தூக்கிவீசியது.

 

Whirling wind; Fishermen who ran for their lives!

 

மேலும் அங்கிருந்த மீனவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த கீற்றுகொட்டைகளும் பறந்தன. இதைபார்த்த கடலோரம் இருந்த மீனவர்கள் அச்சமடைந்து கூச்சல் போட்டுக்கொண்டு தலைதெறித்து ஓடினர். சுமார் 10 நிமிடம் வீசிய இந்த சூழல் காற்றால் கடற்கரையே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. அந்த சமயத்தில் கடற்கரை பகுதியில் இருந்த மீனவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாட்டுப் பொங்கல் நாளில் களை கட்டிய மீன் விற்பனை

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Sale of  fish on Mattu Pongal day

இன்று தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர். இதனால் அதிகப்படியான மீன் விற்பனை நடைபெற்றது.

வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக கூடினர். வஞ்சிரம், காலா, வாலை, அயிலை, திருக்கை,சங்கரா, வவ்வால், நெத்திலி, கிழங்கான் ஆகிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வௌவால் மீன் கிலோ ரூபாய் 1100 க்கும், வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில பகுதிகளில் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கும் நிலையில் மீன் வியாபாரம் இன்று களைகட்டியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் அங்காடியிலும் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, சண்டை உள்ளிட்ட மீன்கள் மட்டுமல்லாது கடல் மீன்களும் விற்பனைக்கு குவிக்க வைக்கப்பட்டது. விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் இன்று அலை மோதியது.

Next Story

தொடர் தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

serial attack; Case against Sri Lankan pirates

 

அண்மையாகவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துவரும் நிலையில், அதேநேரம் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

 

அண்மையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வானவன் மகாதேவி கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.