Advertisment

இந்த வாரம் பிக் பாஸ்ஸில் வெளியேறுவது இவர் தான்? அதிர்ச்சி கொடுக்கும் பிக் பாஸ்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீது கடந்த சீசனை விட சர்ச்சைகள் அதிகமாக கிளம்பியுள்ளது.

Advertisment

big boss

இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றபடவில்லை. மேலும், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய 3 பேரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இந்த நிலையில் 75 நாட்களை நெருங்கி விட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, ஷெரின், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் சேரனும், ஷெரினும் கடைசி இரண்டு இடத்தில் இருப்பதால் இந்த வாரம் சேரன் அல்லது ஷெரின் வெளியேறுவார்கள் என கூறுகின்றனர். அதோடு ஷெரினை விட சேரன் கம்மியான ஓட்டுகள் பெற்றுள்ளதால் சேரன் வெளியேற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.

actor tv show kamalhaasan contest bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe