Skip to main content

எந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளீர்கள்?- எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் சரமாரி கேள்வி! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Which case have you handed over to the CBI?

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று (09/05/2022) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டது. யார் முதலமைச்சராக இருந்தாலும் காவல்துறை தரும் அறிக்கையையே படித்து வருகிறோம். விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரினார். 

 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்றத்தின் கேள்வி நேரம் முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? விசாரணை கைதிகள் தங்கமணி, விக்னேஷ் மரண வழக்குகளை அரசு எதையும் மறைக்கவில்லை. இந்த அரசு அப்படி இருக்காது, யார் தவறு செய்தாலும் கட்டாயம் தண்டனை பெற்று தரப்படும். மீண்டும் சொல்கிறேன், சாத்தான்குளம் சம்பவம் போல் இது விசாரிக்கப்படாது, முறையாக விசாரிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த லாக்-அப் மரணங்களில் எந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளீர்கள்?

 

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம் போல் அல்லாமல் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது. மயிலாப்பூர் முதிய தம்பதி கொலை ஆதாயத்திற்காக என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மயிலாப்பூரில் முதிய தம்பதி கொலை வழக்கில் சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை ஆறு மணி நேரத்தில் கைது செய்த சென்னை காவல்துறைக்கு எனது பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.