Advertisment

எங்கள் எய்ம்ஸ் எங்கே? - செங்கல்லுடன் களத்தில் இறங்கிய சு. வெங்கடேசன் எம்.பி 

Where our AIIMS?  struggle Madurai on behalf of the Marxist Communist Party

கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு நான்காண்டுகள் கடந்தும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையே நீடித்து வரும் நிலையில், அண்மையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ்ஸில்90% பணிகள் முடிந்துவிட்டதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்நிலையில் எங்கள் எய்ம்ஸ் எங்கே? எனக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மதுரை எம்.பிசு.வெங்கடேசன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மதுரையில் சு. வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொண்டு கையில் செங்கல்லை வைத்துக்கொண்டு “எங்கள் எய்ம்ஸ் எங்கே?”என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Advertisment

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe