Skip to main content

அந்த பாத்ரூம் எங்கே இருக்கு..? தகவலறியும் சட்டத்தில் கேள்விக் கேட்கும் வழக்கறிஞர்..!!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

முந்தைய நாள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவர்கள் அடுத்தநாளே கை, காலில் மாவுக்கட்டுப் போட்டுக் கொண்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டோம் என்கிறார்கள். தவறு செய்பவர்களுக்குப் போலீசார் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் என காவல்துறைக்கு ஆதரவாக பலர் முட்டுக்கொடுத்தாலும், இது மனித உரிமை மீறல் என காவல்துறைக்கு எதிர்க்கொடி பிடிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதிலும் ஒரு படி மேலே சென்று " அந்த பாத்ரூம்" பற்றி தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கோரியிருக்கின்றார் நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர்.

 

 In the act of informing


சமீபகாலமாக செயின் பறிப்பவன் தொடங்கி பிக்பாக்கெட் திருடன், கத்தியுடன் உலா வந்த மாணவர்கள், போலீசுடன் ரவுசு செய்தவர்கள் என பலர் போலீசாரிடம் சிக்கி கை கால் உடைக்கப்பட்டு மாவுக்கட்டுடன் திரும்புகின்றனர். இது மனித உரிமைக்கு எதிரானது என்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என காவல்துறைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில் பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் இதுப்பற்றி மாநில காவல்துறை இயக்குநரிடம் தகவலறியும் உரிமைச்சட்டத்தினில் பல தகவல்களை கேள்விகளாக கோரியுள்ளார்.

 

 In the act of informing In the act of informing

 

அதிலிருந்து, "காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களில் வழுகி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட காவலர்கள் கடந்த 2010-19 வரை எத்தனை பேர் என்ற விவரம் காவல்நிலையம் வாரியாக மாவட்டம் வாரியாக தரவேண்டும் என்பதில் ஆரம்பித்து காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதிகள் எத்தனை பேர் கடந்த 2010-19 வரை கழிப்பிடத்தில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளார்கள் என்ற விவரம் காவல் நிலையம் வாரியாக மாவட்டம் வாரியாக தனித்தனியே தருக!" என தகவல்களை கோரியவர், தொடர்ந்து, " தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் அமையப்பெற்றுள்ள கழிப்பிடங்களில் விசாரணை கைதிகள் விழாமல் இருப்பதற்காகவும், காவலர்கள் விழாமல் இருப்பதற்காகவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் எத்தனை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்றும், காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்ற விவரத்த்துடன் இல்லாமல் "தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து சென்று காவலர் சீருடையில இல்லாத நபர்களால் கை, கால்கள் முறிக்கப்படுகிறது எனில் காவலர்கள் சீரூடையில் இல்லாத ரௌடிகள் மூலம் கை, கால்கள் முறிக்கப்படுகிறது எனில் ரௌடிகளுக்கு கொடுக்கப்படும் ஊதியம் எவ்வளவு? என்றும், காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து வந்து கழிப்பிடத்தில் வழுகி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட வகைக்கு எத்தனை காவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் காவல் நிலையம் வாரியாக தனித்தனியே தருக." எனவும் தகவல் கோரியுள்ளார். இதனால் காவல்துறை மட்டத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.