Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழர்களின் பண்பாடும், வரலாறும், அடையாளமும் அழியும்; கலங்கும் போரட்டக்காரர்கள்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அழியப்போவது விவசாயமும், மீன் பிடி தொழிலும் மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும், கட்டிடக்கலைகளும், வரலாற்று ஆவணங்களும் சேர்த்தேதான் அழிக்கப்படும் என்று வேதனை கொள்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 When the hydrocarbon project comes, the culture, history, identity and identity of the Tamils ​​will be destroyed


ஹைட்ரோகார்பன் திட்டத்தை மூன்று மண்டலமாக பிரித்து அதனை எப்படியும் எடுத்துவிடுதற்கான வேலையை விரைவுபடுத்தி வருகிறது மத்தியஅரசு. விலைமதிப்பில்லாத ஹைட்ரோ கார்பனை எடுக்க 1992- 93 ஆண்டுகளிலேயே கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னோட்ட பணிகள் நடந்தது. அதனை ஓஎன்ஜிசி குருடாயில் எடுக்கிறது என்று மேலோட்டமாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரஷ்ய வல்லுனர்களின் துணையுடன் தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கடியில் இருக்கும் கனிமங்களை கண்டறிந்தது.

 

hydro carbon


அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பாகூர் முதல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரை 28,000 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரியும், 98 ஆயிரம் கோடி கன மீட்டர் அளவிற்கு எரிவாயுவும், 4 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஹைட்ரோ கார்பனும் இருப்பதாக அப்போதே கண்டுபிடித்த மத்திய அரசு அதை எடுக்கவே பல்வேறு முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக வரும்காலத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் திட்டத்தை செயல்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற தேவையில்லை என விதிகளை திருத்தி அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது.

 

hydro carbon


இதில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ள 55 மண்டலங்களில் வேதாந்தா குழுமத்திற்கு மட்டுமே 41 இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கெயில் நிறுவனத்திற்கு ஒன்று, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 9. ஹிந்துஸ்தான் எண்ணெய் ஆய்வு நிறுவனத்திற்கு 1 ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு 2. பாரத் எண்ணெய்வள நிறுவனத்திற்கு 1 என 55 மண்டலங்களை உருவாக்கி பிரித்துக்கொடுத்துவிட்டது.

தமிழகத்தில் மூன்று மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றினால் விவசாயம் மட்டுமின்றி வனப்பகுதிகள், நீர்நிலைகள், பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத் தலங்கள் என தமிழர்களின் பண்பாடும் சேர்ந்தே அழிந்தொழியும் நிலை ஏற்பட்டுவிடும். இதற்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளித்து திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க வேண்டும் என திமுக, மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்புகள், என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

hydro carbon


மீத்தேன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில், அதன் ஒருங்கினைப்பாளர் பேரா,ஜெயராமன் தலைமையில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 16 பேர் மீது வழக்கும் பதிவாகியுள்ளது.

போராட்டத்தை முன்னெடுப்பவர்களோ, இது எங்களுக்கான பிரச்சனையில்லை, விவசாயிகள், மீனவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டுக்கான பிரச்சனை உடனே திரண்டு வந்து திட்டத்தை முறியடிக்கவேண்டும்," என முழக்கமிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது