Skip to main content

சடலத்தை சவுக்கு கம்பில் கட்டி தூக்கி செல்லும் அவலம்... என்று மாறும் மலைமக்களின் அவல வாழ்க்கை?

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்துக்குள் வருகிறது நெக்னாமலை. இந்த மலை கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு செல்ல சாலை வசதியில்லை. வனத்துறையோ சாலை அமைக்க அனுமதி மறுக்கிறது. இதனால் கரடுமுரடான பாதையில் தட்டுதடுமாறி இருசக்கர வாகனங்கள் மட்டும் ஓட்டி செல்கின்றனர். வேறு வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

 

 when chang the life of the mountain people?

 

இதுப்பற்றி மாவட்டம் முதல் மாநிலம் வரையிலும் கோரிக்கை மனு அனுப்பிவிட்டனர். எம்.பி, எம்.எல்.ஏக்களிடமும் கோரிக்கை வைத்துவிட்டனர். பிரச்சனை இதுவரை தீரவில்லை.

 

 when chang the life of the mountain people?


இந்நிலையில் டிசம்பர் 9ந்தேதி நெக்னாமலையை சேர்ந்த முனுசாமி. இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் வசித்து வருகிறார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். வேலை செய்த இடத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார். அவரது உடல் ஆம்பூர் வரை வாகனத்தில் கொண்டு வந்துள்ளனர். அதன்பின் வாகனம் மலைக்கு செல்லாது என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும், இறந்தவர்களின் உறவினர்களும் மலையடிவாரத்துக்கு வந்து அவரது உடலை நீண்ட சவுக்கு கம்பில் அவரது உடலை கம்பளி போட்டு சுத்தி மலைமேலே கொண்டு சென்றனர்.

 

 when chang the life of the mountain people?

 

அந்த உடலோடு 7 மாத கர்ப்பிணியாக உள்ள இறந்தவரின் மனைவியும் நடந்து சென்றார். இந்த தகவல் தற்போது வெளியாக பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. அனைத்திலும் முன்னிலையில் உள்ள தமிழகம் என பீற்றிக்கொள்கிறோம். ஆனால், ஒரு கிராமத்துக்கு சாலை வசதி கூட செய்து தர முடியாத நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளார்கள் என்பது வெட்ககேடானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Tragedy continues in Velliangiri Hill

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ரகுராம் அடிக்கடி ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் பழக்கம் உடையவர் என்று சொல்லப்படுகிறது. அதன்படி கடந்த 29 ஆம் தேதி சென்னையில் இருந்து நண்பர்கள் 15 பேருடன் புறப்பட்டு கோவை வந்தடைந்த இவர் வெள்ளியங்கிரி மலை ஏற தொடங்கிய நிலையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இவர் நீரிழிவு நோயாளி என்றும் சொல்லப்படுகிறது. கடந்த மாதம் முதல் இதுவரை 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.