Skip to main content

மாணவர் போராட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை... கட்சியினரை கைது செய்த போலிஸ்!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த மாம்பாக்கம் அருகே வாழைப்பந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு அரசால் வழங்க கூடிய இலவச மடிக்கணினியை வழங்கவில்லையாம். படித்து முடித்த அவர்கள் தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ளனர். தங்களுக்கு தர வேண்டிய மடிக்கணினியை ஏன் வழங்கவில்லை எனக்கேட்டு மாணவ-மாணவிகள் பள்ளியில் கேட்டபோது அங்கு யாரும் சரியாக பதில் சொல்லவில்லையாம்.

 What works for you in the student struggle ... the police who arrested the parties!


தங்களுக்கு தர வேண்டிய இலவச மடிக்கணினியை உடனே வழங்க வேண்டுமேன கோரி ஜூலை 10 ந்தேதி மதியம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த போராட்டத்தை ஆதரித்து அப்பகுதியை சேர்ந்த இந்திய புரட்சிகர மாணவர் சங்கம் மற்றும் மாக்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் இணைந்து கொண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

 

 What works for you in the student struggle ... the police who arrested the parties!


இதுப்பற்றிய தகவலை அறிந்த காவல் துறையினர் போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே, அங்கு வந்த காவல்துறையினர், போராட்டம் நடத்த வந்த மாணவர்களை போராடச் சொல்லிவிட்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துக்கொள்ள வருகை தந்திருந்த இந்திய புரட்சிகர மாணவர் சங்கம் மற்றும் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்து தூக்கி சென்று வேனில் ஏற்றி காவல்நிலையம் சென்றனர். 

 What works for you in the student struggle ... the police who arrested the parties!


பின்னர் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர். அப்போது அப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறி வாழைப்பந்தல் கூட்டுரோட்டில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

 What works for you in the student struggle ... the police who arrested the parties!


இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து வந்த இராணிப்பேட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீதா, மாணவர்களிடத்தில் விரைவில் அரசாங்கம் மடிக்கணினி தரும் என வாக்குறுதி தந்தார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்கள் சலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.